தாலிச் சுமையை தாங்கித் தாங்கி
வயதைத் தொலைக்கும்
மாசற்றவள்;
பிறக்கையில் –
பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும்
புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த
மலரைப் போன்றவள்;
எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து
எள்ளி நகைப்போரை தினங் கடந்து
வாழப் பழகும் –
வலிமையானவள்..
செய்தக் குற்றம் தேடி தேடி
செய்யா தெய்வப் பாதம் நாடி
தொட்டில் ஆடும் –
வயிறு கேட்பவள்;
கெஞ்சிக் கெஞ்சியழுங் கண்ணீரில்
பஞ்சுத் தலையணை தினம் நனைய
கொஞ்சு(ம்)சுகம் மறந்து மறந்தே
வருடக் கணக்கில் வரண்டுப் போனவள்;
பிறக்கும் வயிறு பற்றியெரிய
பெற்ற வயிறும் வளர்த்தத் தோளும்
பாதி பங்குக்குச் சுமக்க –
ஒற்றைக் கூப்பில் அம்மாவாக பத்துமாத பிச்சைகேட்பவள்;
பாவம் அனாதைக் குழந்தையென்று
வாங்கி வளர்க்க ஆசைப்பட்டும்
தத்துப் பிள்ளைக்கு தாயென்றுச் சொல்லும்
ஒற்றை வார்த்தைக்கு பயந்துப் போனவள்;
நடக்கும் பிறக்கும் நாளே போ
போவென்று –
நாளும் கணவனைத் தாங்கிக் தாங்கி
கிடைப்பதையெல்லாம் தின்றுப் பார்ப்பவள்;
கொஞ்சம் விசமேனும் கொடுத்து
உண்டுப்பார் தொட்டிலாடுமென்றால்
அதையும் சிரித்துக்கொண்டே தின்றுதீர்க்க
மனசெல்லாம் வலி சுமப்பவள்;
விளையா மண்ணின் வாசம்போல – பிறவாவயிறும்
பாவி கணக்கு,
பிறந்த பாவம் ஒழியட்டுமென்று
தினம் தினம் – தனை
மனச்சிலுவையில் சுமக்கும் தாயுமனவள்!!
—————————————————————————-
வித்யாசாகர்
அருமை!!
LikeLike
நன்றி உமா..
LikeLike
”செய்தக் குற்றம் தேடி தேடி
செய்யா தெய்வப் பாதம் நாடி
தொட்டில் ஆடும் –
வயிறு கேட்பவள்;” nalla varigal..!
LikeLike
”தாலிச் சுமையை தாங்கித் தாங்கி
வயதைத் தொலைக்கும்
மாசற்றவள்;” anbu seiyum aangal pengalaip pethaiyaagap paarkkiraargal..! athikaaram seiyum aangal avargalaip bothaiyaagap paarkkiraargal..! saga uyiraaga unarbavargal avargalai AATHIPPENNAAGAK kaangiraargal..! nanri nanbare…!
LikeLike
நன்றி ஐயா.. வாழ்க..
LikeLike