விழித்திரைக் கிழித்து
இதயம் கெடுக்குதே காமம்,
பல விளக்குகள் அணைத்து
இருட்டினுள் அடைக்குதே காமம்;
மனத்திரை அகற்றி
மனிதரை நெய்யுது காமம்,
அது மிருகமாய் மாறிட
உள்நின்றுச் சிரிக்குதே காமம்;
விரகத்தில் எரிக்குது
நிர்வாணம் புசிக்குது காமம்,
நிம்மதியை அழிக்குது – தெரிந்தே
குடும்பத்தை யொழிக்குதே காமம்;
காதல் காதல் என்றெல்லாம்
பொய்யினுள் புதையுதே காமம்,
பொழுது விடியவும் அடையவும்
பெண்களைக் கொல்லுதே காமம்;
விதவையை வதைக்குது
வாழ்க்கையைத் தொலைக்குதே காமம்,
முதிர்க்கண்ணி கண்ணனென்று வாலிப
நெருப்பினால் மனிதரைக் கொல்லுதே காமம்;
பிஞ்சு வயதையும்
பார்த்துச் சிரிக்குதே காமம்,
மகளின் பச்சையுடல் பார்த்ததை
அச்சமின்றி மறக்குதே காமம்;
பசிக்குத் தின்றிட பெற்றவளைத்
தேடுமா காமம் ?
பின் பார்ப்பவளை யெல்லாம் பசிக்கு
இரையாக்கினால்பின் பூமியென்னாகுமோ, காமம்?
பத்து வயதுகூட எப்படி
பார்த்ததும் இனிக்குதோ காமம் (?)
ஐயோ பசி பசி என்பாருக்கும்
துணிந்துப் பாதகம் செய்யுதே காமம்;
ச்சீ விட்டகன்று
மானுடமொழியேன் காமம்
பெண்ணவள் மார்பினுள் வழியும்
தாய்மையது போதுமே காமம்;
மனிதரை விலங்கிலிருந்துக் கொஞ்சம்
மனிதற்கே பிரித்துக் கொடேன் காமம்,
பெண்ணுடலை போதையினின்று சற்றே
அறுத்து விடேன் காமம்..
—————————————————
வித்யாசாகர்
இன்றைய பெண் வடிவம்…உருவம்… ஆண்களால் வடிவமைக்கப்பட்டது..!
உருவமைக்கப்பட்டது..! சீவி.. சிரித்து… சிங்காரித்து …சிலம்பணிந்து
….சீலை உடுத்தி..நகை அணிந்து…நாணி…கோணி…நடைப்பின்னி… இடை
மெலிந்து…உடை குறைந்து…அழுது…தொழுது…அப்பப்பா …இந்தப் பெண்கள்
அடிப்படையில் மாறவேண்டும்…அடிமனதில்..மாறவேண்டும்…!
அப்போதுதான்…தங்களின் கனவு…ஆசை…ஈடேறும்..! காமம் கைவசப்படும்..!
LikeLike