இரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..

ஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம்
ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம்
எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம்
எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்;

எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம்
கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம்
வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம்
தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்;

பட்டினியில் ஏழைகள் சாகலாம்
பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம்
லஞ்சத்தை எல்லோருமே வஞ்சமின்றி கேட்கலாம்
மருத்துவம் கல்விக்கூடம் கூட வருமனங்கருதித் திறக்கலாம்

பூகம்பம் வரலாம்
பகையாளி பக்கத்திலிருந்தே போர் தொடுக்கலாம்
சுனாமியோ பெரும்புயலோ திடீரென வீசலாம்; பக்கத்து மாநிலம் கூட
சிரித்துக் கொண்டே அரசியல் பள்ளம் வெட்டலாம்;

விழிப்புணர்வுக் கூட்டத்தை காவலாளிகளே நிறுத்தலாம்
தமிழை அறிந்தே பின்னுக்குத் தள்ளலாம்
ஆபத்தோ அணு உலையோ தமிழகத்தில் திறக்காலாம்
ஏன் பாராளுமன்றத்தில் கூட பாரபட்சத்தைக் காட்டலாம்;

எதுவாயினும் எங்கள் கொடி பறக்கும்
அது இந்தியக் கொடியாகவே இருக்கும்..
—————————————————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s