7. காதலர்களின் பலமும் பலவீனமும் என்ன என்று தாங்கள் கருதுகிறீர்கள்? காதல் குறித்து அதிகம் சிந்தித்துள்ளதின் காரணம் என்ன?
காதலின் பலமென்பது இளைஞர்களைக் கொண்டு இச்சமுதாயத்தை மாற்றுவது. காதலின் பலவீனமெனில் இச்சமுதாயத்தைக் கொண்டு இளைஞர்களைக் காதலால் கொல்வது.
ஒரு மனிதப் பிறப்பிற்கு வாழ்தலின் அடித்தளமாக இருப்பது? உண்பதும் உறங்குவதும், உறவு கொள்வதுமே எனில்; உண்பதையும் உறங்குவதையும் முறைமை படுத்துவது உறவின் செறிவு மட்டுமே. உறவை நெருக்கமாக வைப்பதும் மகிழ்ச்சியை கூட்டுவதும் உறவின் கலப்பு எனில், ‘நம்மைக் கலக்கும் கலன் என்பதே காதல்.
அந்தக் காதலுள் ரசம் தேவைப் பட்ட போதே ஆடை உடுத்தவும் அழகியல் பார்க்கவும் ஆசைப் பட்டோம். ஆக ஆடைக்கு முன்னரே வந்தது காதல் எனில் அதை ஜாதிக்குப் பின் வைத்துக் கொல்லும் சமூகம் இயற்கைக்கு மாறானது என்றும் எதிர்க்கத் தோதானது என்றும் எனக்கெட்டிய அறிவில் தான் எளிதாய்ப் பிறக்கின்றன எனக்கான காதல் கவிதைகள்..
காதல்; உண்மையில் காதலிக்க இதமானது, புரிந்துக் கொள்ள கசக்கிறது எனில் அது நம் வாழ்வியலின் குற்றம், காதலர்களின் குற்றமல்ல..
————————————————————————
வித்யாசாகர்