முதிர் கன்னர்கள்..

வர்கள் முப்பதைக் கடந்தவர்கள்
நாற்பதைத் தொட்டவர்கள்
சாபமின்றி வாழ்க்கையை
நாளும் தொலைத்தவர்கள்..

மணக்கும் மல்லிகையின்
வாசம் ரசிப்பவர்கள்,
மணக்கா பெண்ணெண்ணி கனவினுள்
வீழ்ந்தவர்கள்,

கடவுளை கைதொழா
காதலின் பக்தர்கள்
காலில் உதைத்து கடவுளையும்
சலிப்பவர்கள்;

கோவிலே கதியென்று
நாளும் திரிபவர்கள்
காட்சிகளின் மாட்சியில்
குடும்பத்தைப் பார்ப்பவர்கள்;

வாழ வரும் பெண்ணுக்குக்கூட
வரையறை வைத்திருப்பவர்கள்
வாழும் வாழ்க்கையை
விரையமாக்கி வாழும்போதே நொந்தவர்கள்;

காலநேரம் ராசி பார்த்து
சோடைபோன சங்குமலர்கள்
அழகாய்ப்பூத்தும் கசங்கிப்போன
தெருஓர பிஞ்சுமலர்கள்;

தங்கைக்கும் தமக்கைக்கும்
வாழ வழிவிட்டவர்கள்
பின் அவள்பெற்றப் பிள்ளைக்கும்
காவலிருந்தவர்கள்;

வீட்டைக் காப்பதையே
நாட்டிற்கு ஈடாக எண்ணிப் பயந்தவர்கள்
படு தீவிரமாகக் கணக்குபோட்டு
வாழ்க்கையின் பாதியைக் கடந்தவர்கள்;

பாவம் ஆண்களிலும் உண்டிப்படி
முப்பது நாற்பதிலும் முதிர்கன்னர்கள்’
முயன்று கட்டும் தாலியில் உலகத்தீரே
கொஞ்சம் ஆண்களையும் பாருங்கள்; நம்
அண்ணன்தம்பிகளும் வாழட்டும்!!
——————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றாடி விட்ட காலம்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to முதிர் கன்னர்கள்..

  1. வணக்கம்
    அண்ணா

    குடும்ப உறவு நிலையை சித்தரிக்கும் கவிதைஅழகான மொழி நடையில் அழகுற எழுதியுள்ளிர்கள் அருமை வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Like

  2. uumm சொல்கிறார்:

    nice vidhyasagar..

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s