1) சிவந்துவடியும் பச்சைரத்தம்..

யிருறுக்கும் நாளமெங்கும்
உயிராகும் பச்சைரத்தம்,
உள்நாக்கு பயத்தி லிழுக்க – உடல்
கொதிக்கும் பச்சைரத்தம்;

உடல்தாண்டி வெளிதேடி – காற்றில்
உறையும் பச்சைரத்தம்,
கண்டுகண்டு நாள்முழுதும்
உயிரருக்கும் பச்சைரத்தம்;

மீனறுத்த வாசனையை – உள்ளே
முள்போல் தைக்கும் பச்சைரத்தம்,
ஆடறுத்துப் போனதலையை – கெஞ்சி
என்னுள் கேட்கிறது பச்சைரத்தம்;

பெற்றத் தாய் மடிவழிய – என்மேனி
பசபசத்து நனைந்திருந்தப் பச்சைரத்தம், இன்று
மொத்தத் தாய் வயிறெரிய கேட்காமல்
வடிகிறதே ஈரப் பச்சைரத்தம்;

கண்ணெல்லாம் பூத்துப்போய் அவளுள்
மல்லிகையாய் மணத்திருந்தப் பச்சைரத்தம்,
மன தொன்றிற்குள் அடங்காமல் – ஆடிய ஆட்டமாய்
வழியுதடா  பச்சைரத்தம்;

சொத்தைப்பல் வலிபோல
பகைவலிக்க நோகிறது பச்சைரத்தம்,
நான் பாடையிலேப் போகையிலே – அவன் சிரித்தால்
என் சாம்பலிலும் நாறுமேடா என் பச்சைரத்தம்;

அச்சச்சோ உணரவில்லை பொக்கிஷம்தான்
பச்சைரத்தம்;
வாழும்போதே உணர்ந்துக்கொள் மனிதா – உனை
வரலாற்றிலும் வாழவைக்கும் பச்சைரத்தம்!!
————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 1) சிவந்துவடியும் பச்சைரத்தம்..

  1. வணக்கம்
    அண்ணா.

    கவிதையின்வரிகள் மிக அருமையாக உள்ளது
    வாழும்போதே உணர்ந்துக்கொள் மனிதா – உனை
    வரலாற்றிலும் வாழவைக்கும் பச்சைரத்தம்!!
    பகிர்வுக்கு நன்றி அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s