உயிருறுக்கும் நாளமெங்கும்
உயிராகும் பச்சைரத்தம்,
உள்நாக்கு பயத்தி லிழுக்க – உடல்
கொதிக்கும் பச்சைரத்தம்;
உடல்தாண்டி வெளிதேடி – காற்றில்
உறையும் பச்சைரத்தம்,
கண்டுகண்டு நாள்முழுதும்
உயிரருக்கும் பச்சைரத்தம்;
மீனறுத்த வாசனையை – உள்ளே
முள்போல் தைக்கும் பச்சைரத்தம்,
ஆடறுத்துப் போனதலையை – கெஞ்சி
என்னுள் கேட்கிறது பச்சைரத்தம்;
பெற்றத் தாய் மடிவழிய – என்மேனி
பசபசத்து நனைந்திருந்தப் பச்சைரத்தம், இன்று
மொத்தத் தாய் வயிறெரிய கேட்காமல்
வடிகிறதே ஈரப் பச்சைரத்தம்;
கண்ணெல்லாம் பூத்துப்போய் அவளுள்
மல்லிகையாய் மணத்திருந்தப் பச்சைரத்தம்,
மன தொன்றிற்குள் அடங்காமல் – ஆடிய ஆட்டமாய்
வழியுதடா பச்சைரத்தம்;
சொத்தைப்பல் வலிபோல
பகைவலிக்க நோகிறது பச்சைரத்தம்,
நான் பாடையிலேப் போகையிலே – அவன் சிரித்தால்
என் சாம்பலிலும் நாறுமேடா என் பச்சைரத்தம்;
அச்சச்சோ உணரவில்லை பொக்கிஷம்தான்
பச்சைரத்தம்;
வாழும்போதே உணர்ந்துக்கொள் மனிதா – உனை
வரலாற்றிலும் வாழவைக்கும் பச்சைரத்தம்!!
————————————————————–
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா.
கவிதையின்வரிகள் மிக அருமையாக உள்ளது
வாழும்போதே உணர்ந்துக்கொள் மனிதா – உனை
வரலாற்றிலும் வாழவைக்கும் பச்சைரத்தம்!!
பகிர்வுக்கு நன்றி அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike