வலிக்கச் சுடும் மழைக்காலம்..

ழைக்காலம்
மரணத்தின் வாசம்
மணற்தடமெங்கும்
மரக்கட்டை சாபம்;

ழைக்காலம்
மரண ஓலம்
குளங்குட்டை தோறும்
தவளைகள் ஏலம்;

ழைக்காலம்
பூக்களெல்லாம் பாவம்
உதிர்ந்து நனைந்து
உயிரோடு சாகும்;

ழைக்காலம்
மின்கம்பி அறும்
மின்வெட்டிற்கு முன்பாக
காகத்தின் சிறகெரியும்;

ழைக்காலம்
துண்டுதுண்டாய்ப் போகும்
மண்ணுக்குச் சாமி
மண்புழு மழைநீரில் நாறும்;

ழைக்காலம்
மாடும் கன்றும் – வெளியே
கொசு கடிக்க வாழும்,
கரந்தப் பாலில் மனிதம் சர்க்கரையால் இனிக்கும்;

ழைக்காலம்
கூரைகள் ஒழுகும்
ஈரவிறகில் சிறுமியின்
பசிகூடப் புகையும்,

ழைக்காலம்
மண்ணெண்ணையில் நெருப்பு வாங்கி
அவசரமாய் உலை கொதிக்கும்,
போதாத அரிசியால் சாதம்
கேட்காமலே கஞ்சாகக் குழையும்;

ழைக்காலம்
மாடிவீட்டில் வரும்போது
வசந்தமாகவே உள்ளேவரும்,
கூரைக்குள் மட்டுந்தானோ
காய்ச்சலாகக் கொதிகொதிக்கும்;

மருந்துவாங்கக் கண்ணீர்
யாசகமும் கேட்டுநிற்கும்
கூடிப்போகும் வட்டிக்கடனில்
இருக்குமுயிரை மெல்லவிடும்;

பாரபட்சத்தால் இயற்கையின்
புனிதம்கூட பூதமாகும்,
மழை பெய்யப் பெய்ய – ஈரத்தில்
மனசாட்சி மிகநன்றாக வேகும்!!
——————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வலிக்கச் சுடும் மழைக்காலம்..

  1. yarlpavanan சொல்கிறார்:

    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s