12
வீடுகளை
நினைக்கமறந்த இடத்தில்
கோயில்களைக் கட்டி
என்ன பயன்?
நினைக்கமறந்த இடத்தில்
கோயில்களைக் கட்டி
என்ன பயன்?
மனிதர்களை
அலட்சியம் செய்துவிட்டு
கடவுளை கைதொழுது
என்னபயன்?
மனிதம் ஒட்டாத
மண்மீது மலையைக் குடைந்து
கொணர்ந்தக்
கோவில்களெல்லாம்
மன்மீதான மனசாட்சியின்மையின்
கனம்; கனம் அவ்வளவுதான்;
அதற்காக
கோயில்களின் கதவுகளை
அடைத்துவிடாதீர்கள்,
புதிதாகத் திறக்கும்
கோயிலின் கதவுகளை
மனக்கதவின் வழியே சென்று
திறக்க முயலுங்கள்..
அப்போதங்கே –
திறந்த மனதுள்
தெய்வமிருப்பது தெரியலாம்,
கோயில்கள்
இருப்பது –
இருப்பதோடும் இருந்துப்போகலாம்..
——————————————————
வித்யாசாகர்