6
இரவில் நடக்கிறேன்
எத்தனைப் பூச்சிகள்
இறந்தனவோ தெரியவில்லை;
இறந்தனவோ தெரியவில்லை;
இரவில் நடக்கிறேன்
எத்தனை மலர்கள்
கசங்கினவோ தெரியவில்லை;
இரவில் நடக்கிறேன்
எத்தனைச் சுவடுகள்
கலைந்தனவோ தெரியவில்லை;
இரவில் நடக்கிறேன்
இன்னும் –
எத்தனைக் காலத்திற்கு
இருளில் நடப்பேனோ தெரியவில்லை!!
——————————————————
வித்யாசாகர்
வித்யாசாகர்