அத்தனை லேசாக உன்னை
கடந்துவிட முடியவில்லை..
ஒரே தெருவில் எதிரெதிரே
சந்தித்துக்கொண்டப் பார்வைகள்
நீ பேசி நான் பேசிடாத
பொழுதுகள்
நீ காத்திருந்து
நான் கடந்துவிட்ட நாட்கள்
உன்னை தெரியாமலே
எனக்குள் வலித்த தருணம்
இப்பொழுதும் –
எனை நீ நினைப்பாய்
உனை நான் –
நினைத்துக்கொண்டே யிருப்பேன்
எல்லாம் உள்ளே
வலித்துக்கொண்டே யிருக்கும்
எப்பொழுதையும் போல
நிலா வரும்
நிலா போகும்
நாட்கள் செலவாகும்
வயதுகள் மாறி –
நீ வேறாக
நான் வேறாக ஆவோம்..
அப்போதும் –
இப்படியே
உனை கடந்துவிட
தவித்துக்கொண்டே இருப்பேன் நான்!!
——————————————————————–
வித்யாசாகர்