41, அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது!!

homeடி வாங்கிக்கொண்டு கற்ற
பாடங்களால் அல்ல,

பள்ளிவீதியில்
நாகப்பழம்
அவித்த கிழங்கு
வறுத்த வேர்கடலை
வெம்பிப்போன காட்டுக் கலாக்காய் விற்ற
பாட்டியால்தான் – பள்ளிக்கூடம்
இன்றுவரை நினைவில் இருக்கிறது..
—————————————-

ந்தேகக் கேசில்
பிடித்து உள்ளே போடுமென்றுத்
தெரிந்தும்
காவல்நிலையத்தை தாண்டிப்போய்
இரவு காட்சி பார்க்கவைத்தது
அந்தக் கால சினிமாக்கள்
மட்டுமல்ல,
வயதும் தானென்று
இப்போது புரிகிறது..
—————————————-

நெல் வேகும் வாசம்
மண் நனையும் வெப்பம்
தெருவோர மதிலெட்டிப் பார்க்கும்
செம்பருத்திப் பூக்கள்
கிணற்றடிப் பெண்கள்
மார்கழி கோலம்
திருவிழாக்களில் புதுப்படம்
மாலைநேர மீன் பண்
குல்பி ஐஸ்
இதுபோன்ற எத்தனையையோ
தொலைத்துவிட்டுத்தான் –
நம்மூர் சிட்டியாகிறது..
—————————————-

தும்பிவால் பிடித்து
ரக்கை ஒடித்தது
ஓணானடித்து
குச்சிலே தொங்கவிடுவது,

குருவி அடித்துவிட்டு
துள்ளிகுதித்தது,

காக்கா அடிக்க
உண்டிகோல் செய்ததுயெல்லாம்
யாருக்குமின்று தெரியாவிட்டாலென்ன;

மனதுள் உயிரோடிருக்கிறதந்த
உயிர்கள் துடித்த தருணமெல்லாம்..
—————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s