41, வெயிற்கால வியர்வைத் துளிகள்..

forest-mountains-trees-landscape-summer-sun

1
தெ
ருவோரம் ஒதுங்கிநின்றேன்
மழையில்லை
செருப்பறுந்தக் காலில்
சுட்டது வெயில்;

செருப்பின்றி எதிரே
மீன்கூடைச் சுமந்துபோனாள் கிழவி
சுட்டது மனம்!
——————————————————————–

2
தா
கத்திற்கு
பெப்சி வாங்கப்போனேன்
பசிக்கு
பிச்சைக் கேட்டு
நிற்கிறது ஒரு குழந்தை!!
——————————————————————–

3
பு
கைப்பிடிக்க இறங்கி
ஒரு கடையோரம் நின்றேன்

நிழலுக்கு ஒதுங்க
ஒரு நாய்க்குட்டி வந்து
என் காருக்கடியில் படுத்துக்கொண்டது..
——————————————————————–

4
தியநேரம்
உச்சிவெயிலிலைக் கடிந்தபடி
உணவகத்துள் நுழைந்தேன்

வியர்வையுள் நனைந்தபடி
நெருப்பருகில் நின்று சமைத்துக்கொண்டிருந்தார்
அதே உச்சிவெயிலில்
ஒரு பெரியவர்!!
——————————————————————–

5
வீ
டுகளுக்கு
குளிரூட்டிக் கொண்டார்கள்
மனிதர்கள்..

மரங்களுக்கும்
பறவைகளுக்கும்
வெப்பத்தைக் கூட்டிக்கொண்டு..
——————————————————————–

6
கரங்களில்
வெப்பம் பிரச்சனையில்லை
மின்சாரம்தான் பிரச்சனை

கிராமங்களில்
வெப்பமும் பிரச்சனை
மின்சாரமும் பிரச்சனை..
——————————————————————–

7
வெ
யில் பற்றி எழுதுவோருக்கு
நினைவிலேயே
இருப்பதில்லை
பெண்கள் நிற்கும் அடுப்படியும்
துணி காயவைக்கும் மொட்டைமாடியும்..
——————————————————————–

8
வா
சலில்
வெய்யிலில் அமர்ந்திருக்கும்
பாட்டியைத் தாண்டிப்போய்
சந்தைக்குள்ளிருக்கும் கடையில்
வாழையிலையோ
பூவோ
காய்கறியோ வாங்கிப்போகும்
நமக்கெல்லாம்
பாட்டி பிழைத்தாலென்ன
பிழைக்காவிட்டால் தானென்ன..
——————————————————————–

9
ரை பெடல் அடித்து
மிதிவண்டி ஓட்டும்
சிறுவனுக்கு
வெயிலில் கடைக்கனுப்பிய
இரக்கமற்ற
பக்கத்துவீட்டு அத்தைக் கூட
சாமி தான்..
——————————————————————–

10
நா
க்கு தொங்கத் தொங்க
வெயிலில்
மூச்சிரைக்க ஓடி
மரத்தடியில் நின்றது நாய்,
நாம் மரத்தை வெட்டினோம்

ஓடிப்போய்
சேற்றில் படுத்துக்கொண்டது நாய்
இழுத்து
கதவுகளை மூடினோம்

பசியில்
தாகத்தில்
வெயிலில்
சுற்றிச் சுற்றி வந்தது நாய்

அதைப்பற்றி
நமக்கென்ன கவலை, நாம்
சாப்பிட்டுவிட்டு
தூங்கச் சென்றுவிட்டோம்

மீண்டும்
வாசலில் வந்துநின்று
கத்தியது நாய்

ஒரு கல்லெறிந்து
வாசலில் விட்டதும்
ஓடியது ஓடியது மீண்டும்
வெட்டாத ஒரு மரம் தேடி

தேடி

ஓடிக்கொண்டே இருந்தது
அந்த நாய் ..
——————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஒரு கண்ணாடி இரவில் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s