நீ.. நீ மட்டுமே நீ.. என் நீ!!

url

1
த்தனை விளக்குகள்
எரியுமிந்த வீட்டில்
நீ மட்டுமில்லை;

வீடு இருண்டே
கிடக்கிறது..
———————————–

2
ண்ணீர் தா
என்கிறேன்

துண்டெங்கே எனக்
கத்துகிறேன்

தூளியில்
குழந்தை அழுகிறது பாரென்கிறேன்

நிசத்தில் ஒன்றுமே
நடக்கவில்லை,

ஆம் –

நீயில்லாத வீட்டில்
எனக்கென ஒன்றுமே நடப்பதில்லை..
———————————–

3
னிமை சுகம்
தியானம் பெரிது
உடற்பயிற்சி நன்று
விளையாட்டு அலாதி
எனைவிட்டுப் போ என்றெல்லாம்’ வக்கனையாக
பேசமுடிகிறது
நீ என்னோடிருக்கையில் மட்டும்!!
———————————–

4
போனால்
திரும்பி வராது உயிர் என்பார்கள்
அர்த்தம் புரிந்ததேயில்லை;

நீ ஊருக்கு போய்
நாளொரு நாள்தான் ஆகிறது
உயிர் போனதாகவே உணர்கிறேன்!!
———————————–

5
ள்ளே வரும்போதே
குழந்தையெங்கே என்பேன்
வாசலில் நீ நிற்பாய்;

உள்ளே வரும்போதே
அம்மா சாப்பிட்டாங்களா என்பேன்,
சாப்பிடாமல் நீயிருப்பாய்,

உள்ளே வரும்போதே
அசதியா என்பாய்,
அமைதியாய் இரு போதுமென்பேன்;

இன்று உள்ளே வரும்போதே
நீயிருக்கிறாயா என்றுப் பார்க்கிறேன்

ஒரேயொருமுறை –
நீ நலமா என்றுக் கேட்டுவைக்க…
———————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்... Bookmark the permalink.

2 Responses to நீ.. நீ மட்டுமே நீ.. என் நீ!!

  1. Ranimohan சொல்கிறார்:

    அருமை
    அனுபவம் போல் நல் ஆசானுமில்லை
    அனுபவத்தில் எழும் கவிதையை போல்
    தரமானதொன்றுமில்லை.

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s