அழகே அழகே..

4

 

 

 

 

 

 

 

 

1
படபடவென
புத்தகத் தாள்கள் போலவே
படபடக்கிறது மனசு;

ஒவ்வொருப் பக்கத்திலும்
எழுதிவைத்துக்கொள்கிறேன்
உனது சிரிப்பை..
——————————————————————————-

2
ஒவ்வொரு
நட்சதிரங்களையும்
உடைத்து உடைத்து  –

வேறென்ன செய்யப்போகிறேன்
உன் –
பெயரெழுதுவதைத் தவிர..

——————————————————————————-

3
முன் பேருந்தில் நீ
பின் பேருந்தில் நான்,

படியேறி
படியேறி நிற்கிறது மனசு
உன்னிடம்..
——————————————————————————-

4
நீ நிலா அல்ல
நதி அல்ல
அன்னமோ தென்றலோ அல்ல

ஆனால் எல்லாமே நீ
ஏனெனில் அது நீ..
——————————————————————————-

5
தண்ணீரை கலைக்கிறேன்
உன் முகம் தெரிகிறது;

மீண்டும்
தண்ணீரைக் கலைக்கிறேன்
உன் முகம் தெரிகிறது;

அம்மா ‘என்னடா பைத்தியமா உனக்கு’
என்கிறாள்,

நான் இல்லையென்றெல்லாம்
சொல்லவில்லை,

மீண்டும் தண்ணீரைக் கலைக்கிறேன்
உன் முகம் பார்க்க!!
——————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s