50 உயிரணையும்வரை பிரியாதிருப்பவள்..

21f7d0bf2980f027174e877e95ac4380

மூன்றோ நான்கோ இட்டிலி தின்று
எனை மூன்றுபொழுது ஓடவிட்டவள்;
ஒரு சின்னப்பார்வையுள் சிரிப்பைப் பூட்டி
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொன்றுப்போட்டவள்…
நினைத்ததும் கடவுள்போல் வந்து
நிந்திக்கச் செவ்விதழைக் கொண்டவள்;
உள்ள சிரிப்பழகை உதட்டோரங் கொண்டு
எனை உயிரோடு கனவில் தின்பவள்…
குறுகுறுக்கும் பார்வையாலே
இதயத்துள் கேட்காமல் புகுந்தவள்;
இனி காலம் அது கனக்காது கண்ணுள்
கனவாக நினைவாக நிற்பவள்..
சில்லரையெழுத்துப் பெயரைக்கொண்டு
எனைச் சீனிப்பேச்சில் சொக்கவைத்தவள்;
இனி உயிரணையும் காலம் மட்டும்
உயிராக வாழவே வேள்வி ஏற்றவள்..
இரவோ இது பகலோ எனப் புரியாதெனை
திகைக்கவைத்தவள்;
என் நிமிடமதை யுகமாய் யுகமாய் மாற்றி
காலத்திற்கே யழகு வண்ணம் செய்தவள்..
மனதில் ஒரு துளி
மருந்தைப் போட்டவள்;
மழைபோல் மழைபோல் அவளே
விடாது பெய்பவள்..
அழகே அழகே மொத்தம்
அவளேயானவள்;
உயிரோ ஒரு வரமோ
அவள் கடவுள் தந்தவள்! !
—————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s