இலக்கியவேல் மாத இதழில் வித்யாசாகரின் நேர்காணல்..

எழுதுவது தவம் எனில் எழுத்தது மதிக்கப்படுவதே வரமில்லையா? அப்படி எனது எழுத்திற்கு தொடர்ந்து மாதந்தோறும் வரம் தரும் சாமி நம் “இலக்கியவேல்’ இலக்கிய இதழ்.

நன்னடத்தையும் சமூக ஒழுங்கு குறித்த அக்கறையும் தமிழ்மீது தீராப் பற்றும் கொண்ட, நான் அதிகம் விரும்பும் கவிஞர்களில் ஒருவரும், மதிக்கும் மனிதரில் ஒருவருமான திரு. சந்தர் சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, ஐயா உயர்திரு. கவியோகி வேதம் அவர்களின் முன்னிலையில் தமிழகத்தில் மாதந்தோறும் வெளிவருமிந்த பல்சுவை இலக்கிய இதழினை வேண்டுவோர் chandarsubramanian@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

நெடுநாட்களாக நமது நேர்காணல் குறித்து பேசி பேசி மாதங்கள் தள்ளிப்போயின. இம்முறை ஐயா அவர்களை மதிக்கும்விதமாக இன்று முடித்தேதீருவது என எண்ணி மனதில் பட்டதை மறைக்காது அறத்தோடு நின்று எண்ணியதை எண்ணியவாறு கொடுத்த பதில்களே இந்த நேர்காணல். எனவே ஏதேனும் தவறிருப்பின் பொருத்தருள்க.

கருத்து என்றுப் பார்க்கையில் பலருக்கு பலவாக எண்ணங்கள் வேறுபடலாம். எது எதுவாயினும் மொத்தத்தில் மனிதம் தேடுபவனின் பார்வையிது என்பதை மட்டும் மனதில் கொள்ளவேண்டிக் கேட்டவாறு, எனை படிக்கும் வாழ்த்தும் ஆசிநல்கும் நல்லுள்ளங்களுக்கு நன்றியை முன்வைத்து விடைபெறுகிறேன்..

இனிய கைகூப்புடன்..

நேர்காணலை படிக்க இங்கே சொடுக்கவும்..

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு, நேர்காணல் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s