அழகியல் எனில் அது உன் இயல்!!

என் காதல் கதைசொல்ல
உன் காதல் தந்தாய்;
உன் கனவோடு எனைமட்டும்
உயிராகக் கொண்டாய்,

நதி என்றால் நீர் போல
நானென்றால் நீ யானாய்,
நீ மட்டும் நீ மட்டுமே – என்
பிறக்காத மகளானாய்;

நிறமோ அழகோ
அதலாம் வேண்டாத இடமானாய்;
மனதை அன்பால் வென்ற
அழகான அவளானாய்;

அலைபேசும் கடல்போல
இனி தீராது உன் பேச்சு,
அழகியல் பொருளியல் போல
மனைவியியல் நீ யாச்சு;

உடல்கூசும் நொடிகூட
உனக்கென்னைத் தெரியும்,
எனக்குள்ளே வலித்தாலும்
உனக்கே அது முதலில் புரியும்;

சிறகேதும் இல்லாது
நெடுவானம் போவேன், என்
வானத்தின் வரைகூட
உன்மட்டும் பெண்ணே;

உயிர்மூச்சு சுட்டாலும்
உயிர்விட்டுப் போவாய்;
அனல்காற்று தீண்டாது
அமுதூட்டும் தாய் நீ!!

எனதன்பு செல்லம்மாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!!

பேரன்புடன்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s