நான் வரும்போதெல்லாம்
உனக்காக ஒரு
மலர் வாங்கி வருவேன்
நீ எனைக் கண்டிராத இடத்தில்
அந்த மலர்களை
விட்டுச் செல்வேன்
மலர்களை தாண்டிச்
செல்வாய் நீ,
உனக்கந்த மலர்கள் அழுவதாக
சத்தம் கேட்டிருக்கும் போல்;
நீ திரும்பிப்
பார்ப்பாய்,
சற்று தூரம் சென்று
மீண்டும் மீண்டும்
அந்த மலர்களைப் பார்த்தவாறே போவாய்..
மலர்களும்
மெல்ல அழத்துவங்கும்..
அந்த மலர்களுக்குத் தெரியும்
உன்னையும் என்னையும்
——————————————
வித்யாசாகர்