கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 1

Sad-Love-Status-2-1
தோ..
இப்போதுதான்
நீ இங்கிருந்துச் செல்கிறாய்,

வேறென்ன செய்ய
நான்வந்த கால்தடத்தையும்
உனக்கென விட்டுச்செல்கிறேன்,

நாளை இங்கு மழை வரலாம்
காற்று வீசலாம்
காலங்களும் மாறிப்போகலாம்,
நமக்கு மட்டும்
நீ அங்கு இருந்ததாகவும்
நான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை
நம் மனதிரண்டும் –
சுமந்துக்கொண்டே திரியும்…

மூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள்
மோகினி என்பார்கள்
நம் பேச்சைக் கேட்டு –
அசரீரி கேட்பதாகக் கூட புலம்புவார்கள்,

அந்தக் கால்தடங்களிலிருக்கும் நம்
மனதை மட்டும் யாருக்குமே தெரியாது..
———————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s