இதோ..
இப்போதுதான்
நீ இங்கிருந்துச் செல்கிறாய்,
வேறென்ன செய்ய
நான்வந்த கால்தடத்தையும்
உனக்கென விட்டுச்செல்கிறேன்,
நாளை இங்கு மழை வரலாம்
காற்று வீசலாம்
காலங்களும் மாறிப்போகலாம்,
நமக்கு மட்டும்
நீ அங்கு இருந்ததாகவும்
நான் இங்கு நின்றதாகவும் ஒரு சாட்சியை
நம் மனதிரண்டும் –
சுமந்துக்கொண்டே திரியும்…
மூடர்கள் வேண்டுமெனில் அதை பேய் என்பார்கள்
மோகினி என்பார்கள்
நம் பேச்சைக் கேட்டு –
அசரீரி கேட்பதாகக் கூட புலம்புவார்கள்,
அந்தக் கால்தடங்களிலிருக்கும் நம்
மனதை மட்டும் யாருக்குமே தெரியாது..
———————————————
வித்யாசாகர்