வாட்சபில் அழைக்கிறேன்,
என்னப்பா அழைத்தாய என்கிறாள் அம்மா
இல்லைமா, இதோ உனது பெயரனைப் பாரேன்
ஒரே அமர்க்களம் தான் செய்கிறான்
அதனால் பார்ப்பாயே என்றழைத்தேன் என்றேன்,
அம்மா நினைத்துக் கொண்டிருப்பாள்
அப்போ என்னிடம் பேச அழைக்கவில்லையா என்று,
எனக்கும் உறுத்தியது, உன்னிடம் பேசத்தானேம்மா
அழைதேனென்று சொல்லியிருக்கலாமே..
————————————————————
வித்யாசாகர்