ஊருக்குச் சென்றதும்
அடுத்த நாளே அவளை அழைத்து
பேசிட நினைத்திருந்தேன்,
எட்டி எட்டி
பக்கத்து வீட்டையும்
சன்னலையுமே பார்கிறேன் ஒரு சத்தமுமில்லை
அக்காவை அழைத்து
என்னக்கா அவர்கள் யாரும் இல்லையா
என்றேன்
யார் சேட்டா வீடா என்று
சந்தேகமாக இழுத்தாள் அக்கா
ஆம் ஆம் அந்த பிந்து..
அவளுக்கு கல்யாணம் ஆயி
ஆறு மாதம் ஆச்சு
போ போயி வேலையிருந்தால் பாரு
என்றாள்
உயிரை இழுத்து யாரோ
தெருவில் வீசியது போலிருந்தது..
நான் எனது கடவுச்சீட்டை எடுத்து
தலையில் அடித்துக் கொண்டு அழுதேன்
அம்மா ஏன்டி அவனிடம் சொன்னாய்
என்கிறாள்
அக்கா அவன் தான் மா.. என்று இழுக்கிறாள்
அங்கிருந்த ஒரு குளிரூட்டி மீது
அந்த பிந்துவின் கண்ணீர்ப் பட்ட
திருமண அழைப்பிதழ் பழசாகி
காற்றில் அசைந்து அசைந்து
சற்றேறக்குறைய கீழே விழயிருந்தது..
————————————————————
வித்யாசாகர்