நான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை…

வானந் தொடுந் தூரம்
அது நாளும் வசமாகும்,
பாடல் அது போதும்
உடல் யாவும் உரமேறும்;

பாதம் அது நோகும்
பாதை மிக நீளும்,
காலம் ஒரு கீற்றாய்
காற்றில் நமைப் பேசும்;

கானல் எனும் நீராய்
உள் ளாசை வனப்பூறும்,
மூளும் நெருப் பாளும்
நிலமெல்லாம் நமதாகும்;

கனவே கொடை யாகும்
கடுகளவும் மலை யாகும்,
முயன்றால் உனதாகும்
உழைப்பால் அது பலவாகும்;

நேசம் முதலாகும்’நொடி
தேசம் உனதாகும்,
அன்பில் பிரிவில்லை’ உயி
ரெல்லாம் அமுதூறும்

வெற்றி நிலை யாகும்
மனம்போல அது மாறும்,
கடல் மூடும் அலைபோல
நினைப் பொன்றே  வரமாகும்;

நானென்று கொண்டாய்
இனி நாமென்று காணேன்
உடல் தீதொன்று மில்லை
உள் உள்ளே நான் நீயே!
—————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s