இலண்டன் பாராளுமன்றத்தில் வித்யாசாகர் அவர்களுக்கு வழங்கிய “இலக்கியச் சிகரம்” விருது…

ங்கிலாந்து நாட்டின் “ஐந்தாவது உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழ்  சாதனையாளர்கள் விருது விழா – 2019” கடந்த திங்கட் கிழமை நாள் 09.09.2019 அன்று இலண்டன் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. பல நாட்டு தொழிலதிபர்களின் முன்னிலையிலும், இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்குள்ள பிற தமிழ் அமைப்பினர்களின் போற்றுதலோடும் இவ்விருது விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

உலகத் தமிழர் அமைப்பு (WTO ) மற்றும் கூட்டமைப்பின் தலைவர் திரு. ஜேகப் ரவிபாலன் இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்த,  நடன ஆசிரியர் மற்றும் சன் தொலைக்காட்சி புகழ்மங்கை திருமதி.திவ்யா அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில், உயர்த்திரு. நியா கிரிஃபித், மார்ட்டின் வொய்ட்பீல்டு, வீரேந்திர சர்மா போன்ற இலண்டன் (MP) பாராளுமன்ற உறுப்பினர்களும், ஜெனிவா நாட்டின் (MP) பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. சசீந்திரன் முத்துவேல், டாடா (TATA ) நிறுவனத்தின் இங்கிலாந்து பிரிவுத் தலைவர் திரு. டிம் எல் ஜோன்ஸ், மற்றும் தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், குவைத், ஜெர்மன், துபாய், இந்தியா, கொரியா போன்ற நாடுகளிலிருந்து பல சாதனையாளர்களும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மதிப்புமிகு மூத்த தொழிலதிபர் உயர்திரு. விஜிபி சந்தோசம், தென்னாப்பிரிக்கா தொழிலதிபர் திரு. கார்த்திகேசன் மூத்சாமி, குவைத் தொழிலதிபர் திரு. ஐதர் அலி போன்றோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், நம் சல்லிக்கட்டு நாயகன் திரு. கார்த்திகேய சேனாபதி, குவைத் கவிஞர் திரு. வித்யாசாகர், லண்டன் தொழிலதிபர் திரு. ஜாஹிர் உசேன்,நம் சல்லிக்கட்டு நாயகன் திரு. கார்த்திகேய சேனாபதி, பிரான்சிலிருந்து வந்திருந்த திருமதி. ரேஷ்மி  ஜவகர் கணேஷ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் திரு. குமரன் கவுண்டர், இளம் தொழில் வல்லுநர்கள் திரு. சுகேந்திரன் மூலே மற்றும் திரு. அகமத் வதூத்  போன்றோருக்கு சாதனையாளர் விருதும் வழங்கி இம்மாமன்றம் பல நாட்டு திறமையாளர்களை கௌரவித்தது.

இவ்விழாவில் கவிஞர் திரு. வித்யாசாகர் அவர்களுக்கு அவரது தமிழ் ஆளுமை, படைப்பு நேர்த்தி, மற்றும் பல தமிழ்ப் பணித் திறன்களைப் பாராட்டி  “இலக்கியச் சிகரம்” என்ற பட்டமும் தந்து (WTO ) உலக தமிழர் அமைப்பு பெருமைச் சேர்த்தது.

தொழில் முன்னேற்றம் மற்றும் பல நாடுகளில் உள்ள தொழில்வளம் பற்றியெல்லாம் வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் கருத்து பரிமாறிக்கொண்டனர். அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் விருது பெற்ற அனைத்து திறனாளர்களுக்கும் வாழ்த்தினை தெரிவிக்க, வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் அமைப்பின் தலைவர் உயர்திரு. ஜேகப் ரவிபாலன் அவர்கள் நன்றி பாராட்டி விழாவை நிறைவு செய்தார்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு, விருது விழாக்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s