அம்மாவிற்கும் எனக்கும் நிறைய ரகசியங்கள் இருந்தன தொப்புள்கொடி தூரத்தைக் கூட அவளுடைய அன்புதான் அறுத்துப்போட்டிருந்தது; எனக்குச் சொல்ல அம்மா எப்போதுமே நிறைய வைத்திருப்பாள் நானும் வைத்திருப்பேன், இனி அவற்றை யெல்லாம் யாரிடம் சொல்ல? காற்றிற்கு சொன்னால் கேட்குமாம் மழையிடம் சொன்னால் சொல்லுமாம் அம்மாவைத் தொட முடியாததை காற்றிடமோ மழையிடமோ சொல்லி என்னச் செய்ய ? இங்கு தான் இருப்பாள் அம்மா என்கிறார்கள் என்னோடு தான் இருப்பாள் என்கிறார்கள், ஆனால் தொட்டுப் பார்க்க முடியாத அம்மாவின் முகம் சிரித்துக் காணக் கிடைக்காத அம்மாவின் முகம் ஒன்றுமில்லாத வானத்தில் மிக வலிக்கும் கோடுகள் அவை; கோடுகளை அழிப்பதும் அம்மாவை மறப்பதும் மிகப்பெரிய போராட்டம் அம்மா இல்லாதவர்களுக்கு உண்மையில் அம்மா இறந்துவிட்ட மகன்கள் தான் உலகில் யாருமற்று வாழ்பவர்கள்; தனியே உண்ண சொல்லிக்கொடுத்தவள் தனியே உலகம் பயணிக்க சொல்லித்தந்தவள் தனியே அழக்கூடாது என்றெல்லாம் சொன்னவள் கொஞ்சம் அவளில்லாது வாழ்வதைப் பற்றியும் பேசியிருக்கலாம்; அம்மாக்கள் ஆனால் இரக்கமற்றவர்கள் இரக்கமிருந்தால் மகன்களைவிட்டு இறப்பார்களா ? இதயம் உடைந்தழுதால் இப்பிரபஞ்சம் நனைந்துவிடும் அப்படி கணக்கிறாள் அம்மா உள்ளே; அம்மாவை எண்ணியழும் மனது கடலைவிட மிக ஆழம் மிக்கது, மலைகளைவிட மிகப்பெரிது அவளுடைய சொற்களெல்லாம்; அவள் நானாகவும் நான் அவளாகவும் வாழ்ந்த நினைவுகளைப்போல ஒரு தவமில்லை, அம்மாவைப்போல ஒரு வரமேயில்லை அம்மா தான் வாழ்வின் சந்தோசங்களின் ஒற்றைச்சொல்; அவளில்லாமலும் இதோ அந்த மஞ்சள்பூக்கள் பூக்கிறது பட்டாம்பூச்சிகள் கூட அன்றைப்போலவே பறக்கின்றன நாட்களென்னவோ வேறு வேறென்றாலும் பொழுதுகளின் வண்ணம் மாறுவதேயில்லை; பகலும் இரவும் மாறி மாறி வருடங்கள் எத்தனை மாறினாலென்ன என் சின்ன இதயத்துள் அவள் மட்டும் மாறாமல் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறாள்; உயிரணையும் விளக்கின் கடைசித் துளி வெளிச்சத்தைப்போல, வாழ்க்கை என்னவோ கொஞ்சந் தானென்றாலும் அவளின் நினைவின் பெருவெளியில் தான் நீள்கிறதென் நாட்கள்; அவளென்ன, அத்தனைப் பெரிதா என்கிறார்கள் இல்லை, அவள் அத்தனைப் பெரிதில்லை அவள் மிகச் சிறியவள், என் இதயத்தினளவு தான் அவள் உயிரின் கூடு அவள்; என் அம்மா, என் செல்ல அம்மா! ----------------------------------------------------- வித்யாசாகர்
வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 860,819
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (69)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (27)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
திசெம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.