Tag Archives: அரைகுடத்தின் நீரலைகள்

மரணம் இரைந்த தெருக்கள்..

கைமாற்றி கைமாற்றிக் கொண்டுவந்த அறிவுத் திரள்களின் பிதற்றலில் எப்படியோ கொப்பளிக்கிறது ஞானம்; அல்லது மரணம்! தீக்குச்சி உரசி வீசும் நேரத்திற்குள் அணைந்துவிடுகின்றன உயிர் விளக்குகள்; அல்லது பூத்துவிடுகிறது உயிர்ப் பூ!! காற்றுப் பையின் வெற்று இடத்தில் கண்ணுக்குத் தெரிவதேயில்லை மரணம்; அல்லது பிறப்பின் காரணம்! ஞானத்தை அடையாளம் காட்டாமலேயே மரணம் நிகழும் கடவுளர்கள் வாழும் வீதி; … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

87 அரைகுடத்தின் நீரலைகள்!!

1 அவர்கள் அப்படித் தான் இருந்தார்கள். இனிப்பாகவும் கசப்பாகவும் புதுசாகவும் பழமை குறையாமலும் வாழ்வின் முதல் படியிலிருந்து கடைசிப் படி வரையிலும் அவர்களுக்காகவே அதிகம் வாழ்ந்தார்கள். அவர்களை உறவென்று சொல்லிக் கொள்ளும் கட்டாயத்தில் சிநேகமாய் ஒரு பூவும் – மரணிக்கையில் அழுகையாய் பல குரலும் கேட்டது!! —————————————————————- 2 ஒவ்வொரு தெருவிற்கு இடையேயும் நான்கு வீடுகள் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

82 இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!

கோபத்தின் உச்சத்தில் வாழ்வின் அவலங்களே கைகொட்டிச் சிரிக்கின்றன; நரநரவென்று மென்ற பற்களின் நசுக்களில் இரத்த உறவுகளே சிக்கித் தவிக்கின்றன; உணர்ச்சிப் பொருக்கா நரம்புப் புடைப்பில் உறங்கா இரவுகளே கோபத்தின் சாபங்களாகின்றன; கோபம் ஒரு ஆயுதமென்று ஏந்தப்பட்ட கைகளில் – கூட வாளாய் வீசி அறுக்கப் பட்ட இதயங்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன; இளமை தொலைந்தும் முதுமை … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

81 அரைகுடத்தின் நீரலைகள்..

1 ஒவ்வொரு சொட்டு வியர்வை துளியும் உள்ளே ஒரு வெற்றியை யேனும் வைத்துக் கொண்டே சொட்டுகிறது!!! ———————————————————- 2 வீட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் நிறைய பொருட்கள் இருக்கின்றன.. எல்லாம் இருந்தும் அம்மா இல்லாத வீடு – ஒன்றுமே இல்லாதது போல் கண்ணீரின்றி மூழ்குகிறது; அம்மாவை ஊருக்கு கொண்டு சென்ற விமானம் என்று கொண்டு வருமோ … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

71, யாரையும் நோகாத கனவுகள்..

வலிக்காமல் சலிக்காமல் நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல் நிஜம் பூத்த மலர்களின் – வாசத்தொடும், வரலாறாய் மட்டும் மிகாமலும், முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் – மல்லிகைப் பூக்க, ஒற்றை நிலாத் தெரிய, மரம் செடி கொடிகளின் அசைவில் – சுகந்தக் காற்று வீசும் – தென்றல் பொழுதுகளுக்கிடையே; வஞ்சனையின்றி – உயிர்கள் அனைத்தும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்