Tag Archives: எச்சரிக்கை கவிதைகள்

21) வாழ்வதில் கவிதை செய்வோம் வாருங்கள்!!

கொஞ்சம் தூக்கமும் கொஞ்சம் கவலையும் கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் வலியும் கொஞ்சம் இழப்பும் நிறைய துரோகமும் மிச்சமாகவே உள்ளன; வாருங்கள் கவிதை செய்வோம்! பழைய நினைவும் புதிய பதிவும் படித்த பாடமும் படிக்காத வரலாறும் புரிந்த வாழ்வும் புரியாத உணர்வுகளும் கொட்டிக் கிடக்கின்றன; வாருங்கள் கவிதை செய்வோம்! பட்ட வலியும் கண்படாத இடமும் கதறிய சப்தமும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அம்மா அப்பாயெனும் வானமும் பூமியும்.. (வாழ்வியல் கட்டுரை)

ஆயிரம் கண்ணாடிகளில் பிரதிபலித்து கண்ணைப்பறிக்கும் வெளிச்சமாகவே இருக்கிறது வாழ்க்கை. நாம் தான் அதில் பொய்யையும் புரட்டையும் கலந்து வளத்தையும் நலத்தையும் இழந்து நம்பிக்கைக்கு அப்பாற்ப்பட் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சோகத்தையும் சரிவையுமேக் கொண்டு ஒளியிழந்தும் மகிழ்விழந்தும் வாழ்கிறோம். சற்று சரிவரப் பார்த்தால் நமக்கான அனைத்தும் நம்மைச் சுற்றியே இருக்கிறது. அதை எடுத்துக் கொள்ளும் தெளிவில்தான் ஒருவரில் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

18) பெண்களைத் தேடும் கண்கள்..

கண்குத்திக் கிழிக்கும் பார்வைகளில் வடிகின்றன காமப்பசிக்கான ரத்தம், இரத்தம் சுவைக்கும் மிருகக்கடலில் விட்டில்பூச்சிகளென விழுந்து – உடலாசைநெருப்பில் கருகிப்போகின்றன பல பெண்களின் முகங்கள்; பச்சைப் பச்சையாய் மணக்கும் – அம்மா அக்காத் தங்கைகளின் வாசமருத்து, எப்படி ருசிக்கிறதோ அந்த வெறும் தசையும் வளைவுகளும் உரிமையில்லாப் பார்வையும்; மனதை ரணமென வலிக்கச் சுடும் – குற்றவுணர்வை கசக்கியெறிந்துவிட்டு … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

17) சமைக்கிறவன் சொல்லாதக் கதை…

நாலுச் சுவத்துக்குள்ள வாழ்க்கைதாங்க – எங்க கட்டில்சுகமும் கனவுலதாங்க, சம்பளமெல்லாம் பெருசுதாங்க – அதைச் சம்பாதிச்சும் வாழ்க்கை நெருப்பிலதாங்க; சுட்ட பணம் பளபளக்கும் – மிளகாய்ச் சிவப்பாய் நாட்கள்கூடக் கடக்கும், அனல்’ல வெந்து சாகும்வரை – நாங்க சமைக்கும் சோறு மணமணக்கும்; நொந்த மனசு நெடுநாள் வலிக்கும் – கரண்டி துழாவி’ தெரியும் முகங்களைப் பார்க்கும், … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..

1 சமையலறைக் குழாயில் குடிக்க தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறேன்; பாதி நிறைவதற்குள் நீ என்னருகே வந்து அப்பா எனக்குக் குடிக்க நீர் வேண்டும் என்கிறாய்; நான் தண்ணீர் நிரம்பிடாத பாதி சொம்போடு நீ கேட்டதும் வெடுக்கெனத் திரும்பி உனக்குத் தண்ணீர் கொடுக்கிறேன்; நிருத்திவிடாதக் குழாயிலிருந்து தண்ணீர் போய்க் கொண்டேயிருக்கிறது நீயும் குடித்துக் கொண்டேயிருக்கிறாய், இரண்டையுமே என்னால் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்