Tag Archives: துளிப்பா

கவிஞர் நடா சிவராஜாவின் சின்ன சின்ன தூறல்கள்.. (அணிந்துரை)

மண்ணும் மரபும் பிசைந்த நிலாச்சோறுக் கவிதைகள் அழகு!! எழுத்து ஒரு கலை. அதை எழுத எடுக்கையில் எல்லாம் மறக்கும், உலகே நம் நினைவிலிருந்து அகன்றுப் போகும், எழுத்தொன்றே மூச்சாகும்; அது மூச்சாகும் தருணம் பிறக்கிறது நம் கவிதையும் இன்னபிற படைப்புக்களுமென்பதற்கு இன்னொரு உதாரணம் தான் இந்த “சின்ன சின்ன தூறல்கள்” எனும் கவிதைத் தொகுப்பும். வாழ்வின் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தக விமர்சனம் – அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்!

உறவுகளுக்கு வணக்கம், மேற்குறிய நம் காதல் கவிதைகளின் தொகுப்பிற்குரிய விமர்சனம் கீழுள்ள தனிச் சுட்டியின் வழியேக் கிடைக்கப்பெறும் புத்தகங்கள் விற்பனைக்கு எனும் பக்கத்தினோடு இணைக்கப்பட்டுள்ளது. நம் படைப்புக்களை வாங்கிப் படிக்க எண்ணுவோர் சென்னை ஹிக்கீம்பாதம்ஸ் மற்றும் தி.நகரில் உள்ள நியூ புக் லேண்ட், புத்தகநிலையம் சென்று வாங்கிக் கொள்ளலாம். இணையம் மூலம் வாங்க எண்ணுவோர் நூலுலகம் … Continue reading

Posted in அணிந்துரை, அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

21) வாழ்வதில் கவிதை செய்வோம் வாருங்கள்!!

கொஞ்சம் தூக்கமும் கொஞ்சம் கவலையும் கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் வலியும் கொஞ்சம் இழப்பும் நிறைய துரோகமும் மிச்சமாகவே உள்ளன; வாருங்கள் கவிதை செய்வோம்! பழைய நினைவும் புதிய பதிவும் படித்த பாடமும் படிக்காத வரலாறும் புரிந்த வாழ்வும் புரியாத உணர்வுகளும் கொட்டிக் கிடக்கின்றன; வாருங்கள் கவிதை செய்வோம்! பட்ட வலியும் கண்படாத இடமும் கதறிய சப்தமும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அம்மா அப்பாயெனும் வானமும் பூமியும்.. (வாழ்வியல் கட்டுரை)

ஆயிரம் கண்ணாடிகளில் பிரதிபலித்து கண்ணைப்பறிக்கும் வெளிச்சமாகவே இருக்கிறது வாழ்க்கை. நாம் தான் அதில் பொய்யையும் புரட்டையும் கலந்து வளத்தையும் நலத்தையும் இழந்து நம்பிக்கைக்கு அப்பாற்ப்பட் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சோகத்தையும் சரிவையுமேக் கொண்டு ஒளியிழந்தும் மகிழ்விழந்தும் வாழ்கிறோம். சற்று சரிவரப் பார்த்தால் நமக்கான அனைத்தும் நம்மைச் சுற்றியே இருக்கிறது. அதை எடுத்துக் கொள்ளும் தெளிவில்தான் ஒருவரில் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

18) பெண்களைத் தேடும் கண்கள்..

கண்குத்திக் கிழிக்கும் பார்வைகளில் வடிகின்றன காமப்பசிக்கான ரத்தம், இரத்தம் சுவைக்கும் மிருகக்கடலில் விட்டில்பூச்சிகளென விழுந்து – உடலாசைநெருப்பில் கருகிப்போகின்றன பல பெண்களின் முகங்கள்; பச்சைப் பச்சையாய் மணக்கும் – அம்மா அக்காத் தங்கைகளின் வாசமருத்து, எப்படி ருசிக்கிறதோ அந்த வெறும் தசையும் வளைவுகளும் உரிமையில்லாப் பார்வையும்; மனதை ரணமென வலிக்கச் சுடும் – குற்றவுணர்வை கசக்கியெறிந்துவிட்டு … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்