Tag Archives: பிரண்ட்ஸ்

18, காதலும் வீரமும் களமாடிய கதை ‘மதராசப் பட்டினம்’

குண்டுகளுக்கிடையே முளைத்த காதலை பழைய மதராஸ் மண்ணிலிருந்து தோண்டி நம் உணர்வுகளுக்குள் மீண்டும் புதைக்குமொரு கதையிது, யாருக்குமே தெரியாமல் உயிரோடு புதைந்த இதயங்களைவைத்து எழுதவேண்டியதொரு காவியத்திற்கு கதாபாத்திரங்களின் மூலம் உயிர்தந்து ஒரு சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜயின் கம்பீர வெற்றியிது, உள்ளூறிய சுதந்திர தாகத்தின் உணர்வோடு காதலையும் பிண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நமைப் புதைத்துவைத்துக்கொள்ளும் … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“வெங்காயம்” கடிக்க காரமென்றாலும் காணல் தகும்.. (திரைவிமர்சனம்)

எம் கிராமத்துக் குறும்புகளைப் பொருக்கி காதல்மண்ணில் ஊன்றிய கதை. மூடநம்பிக்கையின் தாலியறுத்து மாடசாமியின் கோவிலுடைக்கும் காவியுடுத்திய காடைகளை இல்லாதொழிக்கும் கதை. யதார்த்ததின் தெரு திரிந்து எம் மக்களின் வாழ்தலை திரையிலக்கியமாக்கிய படம். பசுமைமாறாத வெளியெங்கும் மிளிரும் என் எளிய மக்களின் சிரிப்பையும் அழையையும் நகர்வுகளையும் தொகுத்துக்கொள்ளும் இரு மனசுகளின் உயிர்சுரம் கூடிய சோகராகம். இசையின் ஆழம் … Continue reading

Posted in சொற்களின் போர் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

11, உயிர் பெரிது; மானம் பெரிது; வீரம் பெரிது; கொலை மட்டுமே கொடிது என்கிறான் அரவான்!

முகமெல்லாம் கரி பூசி; பூசிய கரிக்கு உணர்வு கூட்டி; உணர்வின் உச்சத்தை படச்சுருளில் தோய்த்து என் முன்னோர் வாழ்ந்த கதையொன்றை திரைப்படமாக்கி, அதன் நெளிவுசுளிவு பிசகாமல் காட்ட எடுத்த பாராட்டத்தக்க திரையுலக பிரயத்தனம் இந்த ‘அரவான்’. உண்மையில் ஒரு பிறவி முடிந்து இருநூறு வருடங்களுக்கு பின்னே போய் உடல்கட்டை விழ மீண்டும் திரையரங்கம் விட்டு வெளியே … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கடற்கரையோரம் பாண்டிராஜின் பசங்களும்; நம்ம படிப்பும் (மெரினா)

விடுதலையின் வெப்பம் தணியாத மண்ணினோரம் அலைந்து அலைந்து திரியும் கடலலைகளைப் போய்க் கேட்டால் அதற்குக் கூட மறந்திருக்கும் அங்கே வாழ்ந்தவர்களின் முகங்கள். அப்படி முகம் மறக்கப்படும் இடத்தில் உயிர்பதித்து வாழும் இதயங்களைப் பற்றி படிப்பின் வழியே பேசுகிறது ‘பசங்க’ திரைப்பட இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரீனா’ திரைப்படம். நட்பின் வாசமருந்துவிடாத காலத் தாமரையின் இதழ்கள் ஒவ்வொன்றிலும் சிறந்த … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சங்கரின் ‘நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன்’

தமிழகத்து நகரெங்கும் தொங்கும் தமிழென்னும் திராட்சை மரத்தின் தேனிற்கிடையே சொட்டும் ஒரு துளி நஞ்சாகக் கலந்த ஆங்கிலம் விடுத்து முழுக்க முழக்க தன்னம்பிக்கையெனும் அமிழ்தம் நிறைந்த களம் ‘இந்த நண்பன் எனும் திரைப்படம். என் மகன் படித்து பெரிய பட்டதாரி ஆவான் என்ற காலம் கடந்து அவன் பெரிய விஞ்ஞானியாக வருவான், மருத்துவனாக ஆவான், குறைந்த … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்