Tag Archives: மூட்டைபூச்சி

சிரிக்கிறாள்.. பார்க்கிறாள்.. மறுக்கிறாள்.. (குறுங்கவிதை)

1 கணினி வாசத்தில் காய்கறி விற்றாள் கைகளில் ஒரு ஊசி கூடுதலாய் போடப்பட்டது.. 2 சில்லறை கொடுத்தேன் கைதொட்டு வாங்கினாள் காதல் மின்சாரம் தாக்கியதில் கண்கள் வெளிச்சமானது.. 3 நாங்கள் நடந்துவரும் தெரு அதில் காதலைச் சொன்னது; சுவரொட்டி.. 4 ஜல் ஜல் ஜல்.. ஜல் ஜல் ஜல்.. என் உறக்கத்தை மிதித்துக்கொண்டே நடந்தாள்; கனவில்.. … Continue reading

Posted in சொற்களின் போர் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முதிர் கன்னர்கள்..

அவர்கள் முப்பதைக் கடந்தவர்கள் நாற்பதைத் தொட்டவர்கள் சாபமின்றி வாழ்க்கையை நாளும் தொலைத்தவர்கள்.. மணக்கும் மல்லிகையின் வாசம் ரசிப்பவர்கள், மணக்கா பெண்ணெண்ணி கனவினுள் வீழ்ந்தவர்கள், கடவுளை கைதொழா காதலின் பக்தர்கள் காலில் உதைத்து கடவுளையும் சலிப்பவர்கள்; கோவிலே கதியென்று நாளும் திரிபவர்கள் காட்சிகளின் மாட்சியில் குடும்பத்தைப் பார்ப்பவர்கள்; வாழ வரும் பெண்ணுக்குக்கூட வரையறை வைத்திருப்பவர்கள் வாழும் வாழ்க்கையை … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாழ்க தமிழ் பேசுவோர்..

வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத் துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை.. அம்மா அப்பா மாறி மம்மி டாடியானது மட்டுமல்ல டிவி ரேடியோ கூட வெகுவாய் தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட டெட்பாடி ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ… (?) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மூடியக் கழிவறையும்; திறந்திருக்கும் நோயின் கதவுகளும்..

அந்தம்மா பாவம் உணவுண்ணும் முன்கூட அலசி கழுவிவிட்டாள் அந்தக் கழிவறையை; அடுத்தடுத்து அதை மிதித்து நோயுக்கு வழிவிட்டோர் நீயும் நானுமில்லையா? அவருக்கும் நமக்குமிருக்கும் அதே கைகள்தானே உனக்கும் எனக்குமாய் தினமும் கழிவறை துடைக்கிறது? அவரவர் வேலையை அவரவர் செய்யின் எவருக்கு வேலை வரும் எவனெவன் காலடியோ கழுவ? நாற்றம் என்று நாம் மூக்கடைக்கும் முன்பே மூனு … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தூக்கம் திருடிய மிருகம்..

தூக்கத்திற்காக ஏங்கும் இரவுகளை தெரியுமா உங்களுக்கு…? உறங்கமுடியா இரவும் நஞ்சு கலந்துண்ணும் உணவும் ஒன்றென்று மூட்டைபூச்சிற்கும் தெரியவில்லை சில மனிதர்க்கும் புரியவில்லை.. மூட்டைபூச்சிற்குப் பயந்து இரவெல்லாம் மின்விளக்கிட்டு உறங்காமல் அமர்ந்திருக்கும் எங்களை சம்பளம் தரும் நிறுவனம் – தூங்குமூஞ்சு என்றுதான் அழைக்கிறது.. கண்கள் சிவந்தப் பகலில் மனைவி குழந்தைகளைவிட அதிகம் மூட்டைபூச்சிகளை நினைத்துதான் போகிறது எங்களின் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக