குவைத் கவிஞர் வித்யாசாகர் அவர்கட்கு “ஆய்வுச் செம்மல் விருது”

இந்த உலகம் சுழல்வதை சுவாசிப்பதை உயிர்களை உள்ளவாறு உயிர்ப்பித்து வைத்துள்ளதை நாம் எல்லோருமே அறிவோம். ஆயினும் ஆங்காங்கே இன்று தமிழ் பேசி, குறள் ஓதி, வள்ளுவம் காத்து, அறம் போற்றி எமது தமிழர் மிக கம்பீரமாக வளம் வருகின்றனர் என்றால் அதற்கு அன்றிலிருந்து இன்று வரை எங்கோ யாரோ ஒரு தனிமனிதன் உழைத்து பொருளீட்டி அதை நம் தமிழிற்கென்று வாரிவழங்கி மொழிக்காக்க உயிர்வாழ்ந்து வருகிறான் என்பதை வரலாற்றை புரட்டிப் பார்த்தல் நன்கறியலாம்.

அவ்வாறு, நம் தாய்தமிழகத்தின் தலைநகராம் நமது சிங்காரச் சென்னையில் “தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து 13.10.2019-ஆம் திகதி சென்ற மாதம் ஞாயிற்றுக் கிழமையன்று “பேரறிஞர் அண்ணா அரங்கில்” மிக கம்பீரமாக “ஒரு பன்னாட்டுத் தமிழ் மாநாட்டை” மிக வெற்றிகரமாக நடத்தி மகிழ்ந்தது.
 
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பல அறிஞர்களோடு தமிழகம், புதுச்சேரி என பல தமிழறிஞர்களும் தமிழார்வலர்களுமாய் அரங்கம் நிறைந்திருக்க உலகப் பொது மறை தந்த அய்யன் வள்ளுவனை வணங்கி தொடங்கப்பட்ட மாநாட்டில் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை நிறுவனர் திரு.சேக்கிழார் அப்பாசாமி அவர்கள் தலைமையுரையாற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. மணவழகன் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
 
தமிழ்நாடு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு க. பாண்டியராஜன் அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டு கவியரங்க கவிதை தொகுப்பான ” எங்கள் கனவுகள் ” நூல் உள்ளிட்ட எட்டு நூல்கள் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். முதுபெரும் கவிஞர் ஐயா பழமலை அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றமை, அதை வாழ்த்தி மாண்புமிகு அமைச்சர் பேசியதெல்லாம் நிகழ்வின் பெருஞ்சிறப்புக்களாக விளங்கியது.
 
பல துறைகளைச் சார்ந்த சாண்றோர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது ”, ஆய்வரங்கத்தில் கலந்துகொண்ட குவைத் கவிஞர் வித்யாசாகர் டென்மார்க் முல்லைநாச்சியார் உள்ளிட்ட மற்ற நாட்டு பிரதிநிதிகளுக்கும் ” ஆய்வுச்செம்மல்” விருது , கவியரங்கத் தலைமை ஏற்றவர்களுக்கு “பெருங்கவி விருது ” என திறனறிந்து பல விருதுகள் வழங்கி படைப்பாளிகள் எண்ணற்றோர் பெருமைசெய்யப் பட்டனர்.
 
தமிழ்ப்பட்டறை இலக்கிய பேரவை நிறுவனர் திரு. சேக்கிழார் அப்பாசாமி தலைமையேற்க, டென்மார்க் கவிஞர் முல்லை நாச்சியார் , சிங்கப்பூர் பாவலர் கிருஷ்ணமூர்த்தி , இலங்கை முனைவர் ஹனிபா இஸ்மாயில் , குவைத் கவிஞர் வித்யாசாகர் , மொரிசியஸ் கவிஞர் ராஜா , பிரான்ஸ் கவிஞர் கனகராணி செல்வரத்தினம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. மணவழகன் ஆகியோர் மேடையில் வீற்றிருந்து மாநாட்டிற்கு மதிப்பு சேர்த்தனர்.

அதைத் தொடர்ந்து “பன்னாட்டுப் பரப்பில் தமிழ்ப் படைப்பிலக்கிய செல்நெறிகள் ” எனும் தலைப்பில் ஆய்வரங்கம் கலைமாமணி திரு. நெய்தல் நாடன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. டென்மார்க் கவிஞர் முல்லை நாச்சியார் , சிங்கப்பூர் பாவலர் கிருஷ்ணமூர்த்தி , இலங்கை முனைவர் ஹனிபா இஸ்மாயில் , குவைத் கவிஞர் வித்யாசாகர் , மொரிசியஸ் கவிஞர் ராஜா , பிரான்ஸ் கவிஞர் கனகராணி செல்வரத்தினம் போன்றோரின் தத்தம் நாடுகளில் நிகழும் தமிழ் விழாக்கள், தமிழிலக்கிய வளர்ச்சி மற்றும் தமிழர்தம் முன்னேற்றம் குறித்தெல்லாம் மிகச் சிறப்பாக உரையாற்றி அவரவர்தம் நாட்டின் தமிழிலக்கிய குறிப்புகளை மாநாட்டில் செம்மையாக பதிவிட்டனர்.

முன்னதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ. விசயராகவன் மாநாட்டை வாழ்த்தி சிறப்புரை நிகழ்த்தினார்கள். மாநாட்டில் “எங்கள் கனவுகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் கலந்துகொண்ட கவிஞர்களுக்கு” கவிச்செம்மல் ” விருது வழங்கி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. மணவழகன் விரிவுரை நிகழ்த்தினார்கள் .மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்குபன்னாட்டு மாநாட்டு நினைவு குறித்த பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை
Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக