மகிழ்ச்சியாய் வாழ்வது எப்படி

நண்பர்களுக்கு வணக்கம்,

பொதுவில் பேசுவது கொதிநீரில் நடப்பது போன்று; காரணம் அவதூறு வந்துவிடுமோ என்றல்ல. தவறான கருத்தைச் சொல்லி யாரையும் வழிதவற வைத்துவிடக் கூடாது என்பதாலும், எவரொருவரின் மனதும் வலித்துவிடக் கூடாதென்பதுவுமே பேரெண்ணம். பெருங்காரணம்.

இந்த காணொளியும் மகிழ்ச்சியைக் குறித்தும், வாழ்வின் சவால்களை வெல்வது பற்றியும் பேச எண்ணியதே. என்றாலும், நீங்கள் கேட்டு சரியெனில் மகிழ்க. அல்லது போனால் குறை பொறுத்தருள்க.

நானும் கற்கிறேன், நானும் பயணிக்கிறேன், நானும் இம்மண்ணில் வாழ்கிறேன், எல்லாம் நாளடிப்படையில் எனக்கும் மாறலாம். நல்லது எதுவென்றாலும் தலைமேல் ஏற்று எல்லோரின் வாழ்வும் நல்லதாக அமையவே முயன்று வருகிறேன். எனவே, நல்லவை விதைத்துப் போவோம். நல்லதே எல்லாம் நடக்கும், நல்லதாகவே எல்லாம் மாறும் என்பது எனது அழுத்தமான நன்மைபிக்கை.

பொறுமை காத்து காணொளி முழுதும் பாருங்கள். திட்டாதீர்கள். தவறை எடுத்தியம்பினால் ஏற்று, எடுத்து, என்னையும் சரிசெய்துகொள்ள காத்திருக்கிறேன் அன்புறவுகளே.

ஏறத்தாழ ஒரு மணி நேர நிகழ்வு. காணொளியைக் காண இங்கே சொடுக்கவும் – 

https://lnkd.in/dqjJYRx7

ஏற்றத்தாழ்வின்றி, பாகுபாடின்றி, அனைவருக்குமான மிக்க அன்பும், நன்றியும், வணக்கமும், வாழ்த்துக்களுடனும்;

உங்களன்பு

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மா இல்லாத வானமும் சில பட்டாம்பூச்சிகளும்…

ம்மாவிற்கும் எனக்கும் 
நிறைய ரகசியங்கள் இருந்தன
தொப்புள்கொடி தூரத்தைக் கூட 
அவளுடைய அன்புதான் அறுத்துப்போட்டிருந்தது;

எனக்குச் சொல்ல அம்மா எப்போதுமே
நிறைய வைத்திருப்பாள் 
நானும் வைத்திருப்பேன், இனி 
அவற்றை யெல்லாம் யாரிடம் சொல்ல?

காற்றிற்கு சொன்னால் கேட்குமாம் 
மழையிடம் சொன்னால் சொல்லுமாம் 
அம்மாவைத் தொட முடியாததை 
காற்றிடமோ மழையிடமோ சொல்லி என்னச் செய்ய ? 

இங்கு தான் இருப்பாள் அம்மா என்கிறார்கள் 
என்னோடு தான் இருப்பாள் என்கிறார்கள், ஆனால்
தொட்டுப் பார்க்க முடியாத அம்மாவின் முகம் 
சிரித்துக் காணக் கிடைக்காத அம்மாவின் முகம்
ஒன்றுமில்லாத வானத்தில் மிக வலிக்கும் கோடுகள் அவை; 

கோடுகளை அழிப்பதும் அம்மாவை மறப்பதும் 
மிகப்பெரிய போராட்டம் அம்மா இல்லாதவர்களுக்கு
உண்மையில் அம்மா இறந்துவிட்ட மகன்கள் தான் 
உலகில் யாருமற்று வாழ்பவர்கள்; 

தனியே உண்ண சொல்லிக்கொடுத்தவள் 
தனியே உலகம் பயணிக்க சொல்லித்தந்தவள் 
தனியே அழக்கூடாது என்றெல்லாம் சொன்னவள் கொஞ்சம்
அவளில்லாது வாழ்வதைப் பற்றியும் பேசியிருக்கலாம்;

அம்மாக்கள் ஆனால் இரக்கமற்றவர்கள் 
இரக்கமிருந்தால் மகன்களைவிட்டு இறப்பார்களா ? 
இதயம் உடைந்தழுதால் இப்பிரபஞ்சம் நனைந்துவிடும் 
அப்படி கணக்கிறாள் அம்மா உள்ளே;

அம்மாவை எண்ணியழும் மனது
கடலைவிட மிக ஆழம் மிக்கது, 
மலைகளைவிட மிகப்பெரிது 
அவளுடைய சொற்களெல்லாம்;

அவள் நானாகவும் நான் அவளாகவும் 
வாழ்ந்த நினைவுகளைப்போல ஒரு தவமில்லை, 
அம்மாவைப்போல ஒரு வரமேயில்லை 
அம்மா தான் வாழ்வின் சந்தோசங்களின் ஒற்றைச்சொல்;

அவளில்லாமலும் இதோ அந்த மஞ்சள்பூக்கள் பூக்கிறது
பட்டாம்பூச்சிகள் கூட அன்றைப்போலவே பறக்கின்றன
நாட்களென்னவோ வேறு வேறென்றாலும்
பொழுதுகளின் வண்ணம் மாறுவதேயில்லை;

பகலும் இரவும் மாறி மாறி 
வருடங்கள் எத்தனை மாறினாலென்ன
என் சின்ன இதயத்துள் அவள் மட்டும் மாறாமல் 
நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறாள்;

உயிரணையும் விளக்கின் கடைசித் துளி
வெளிச்சத்தைப்போல, வாழ்க்கை என்னவோ
கொஞ்சந் தானென்றாலும் அவளின் நினைவின் 
பெருவெளியில் தான் நீள்கிறதென் நாட்கள்;

அவளென்ன, அத்தனைப் பெரிதா என்கிறார்கள்
இல்லை, அவள் அத்தனைப் பெரிதில்லை
அவள் மிகச் சிறியவள், என் இதயத்தினளவு தான் அவள்
உயிரின் கூடு அவள்; என் அம்மா, என் செல்ல அம்மா!
-----------------------------------------------------
வித்யாசாகர்
Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாறாத விடியலின் அழகும், வீசும் காற்றும்… 

       

விளக்குகள் அணைந்தாலென்ன
விடியல் இயல்புதானே
காத்திரு;

நட்சத்திரங்கள் தோன்றாவிட்டாலென்ன
விட்டில் பூச்சி ஒன்று வரும்
காத்திரு;

கற்றது வேறானாலென்ன 
அறிவு உன்னுடையது தானே
காத்திரு;

யார்விட்டுப் போனாலென்ன
உயிர் உண்டுதானே
காத்திரு;

உலகம் எப்படி இருந்தாலென்ன 
நீ உன்னை மாற்ற ஒரு காலம் வரும்
காத்திரு;

யாரால் எது செய்யமுடியா விட்டாலும்
உன்னால் எல்லாம் முடியும் 
காத்திரு;

நம்பிக்கைதான் வாழ்க்கை 
நம்பு, நம்பிக்கையோடு எழுந்து 
இந்த உலகம் பார் 
யாரோ போனாலும் யாரோ வருகிறார்கள் 
ஏதோ போனாலும் ஏதோ வருகிறது 
போனது கிடைப்பதுமில்லை 
வருவது நிற்பதுமில்லை;
பிறகேன் வருத்தம் ?

எல்லாம் மாறும், நம்பியிரு
பூக்கள் நிறைந்த காடுகளில்
ஒரு மலர் உதிர்வதும் 
ஒரு மலர் பூப்பதும் இயல்பு எனில்
எல்லாம் மாறுவதும் கூட 
இயற்கையின் இயல்புதானே?

பிறகு நீயென்ன? நானென்ன?
போவதை விடு
வாழ்வதை எண்ணிக் காத்திரு;

இருக்கும் காலம் அத்தனையும்
உயிர் மிக்கவை,
இந்த உலகம் உயிர்கள் வானம் பூமி மழை கடல்
காற்று சூரியன் நிலா காடு அத்தனையும் உயிர் மிக்கவை
அவையெல்லாம் உனக்காகக் காத்திருக்கிறது

நீ தான் 
ஏதோ ஒன்றிற்காக மட்டுமே மயங்கி
காத்திருந்து பிரிந்து ஒடுங்கி
ஒன்றிற்காக மட்டுமே அழுது
ஒன்றிற்காக மட்டுமே சாகிறாய்
ஒன்று போனால், எல்லாம் போனதாய் முடிகிறாய்;

சற்று யோசி; 
சாதல் பிழையன்று
தனித்து வலித்து சாதல் 
சரியுமன்று; 

வாழ்ந்துக்காட்டப் பிறந்தவர்கள் நாம்
வாழ்தலே விதி, வாழ்தலே வரம்;

சரி சரி; விடு
நிறைய யோசிக்காதே
நீ உயிர்த்திருக்க
உள்ளிழுக்கும் காற்று இந்த பிரபஞ்சம் வரை
நிறைந்தேயிருக்கிறது; போ

மிச்சமிருக்கும் நாட்களையேனும்
மகிழ்வோடு வாழ்ந்துவிடு!!
--------------------------------------------
வித்யாசாகர்
Posted in உயிர்க் காற்று | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அம்மா இல்லாத நானும் இந்த வானும் உலகும்…

னக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது
மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,
 
யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல 
உள்ளே உயிர் சொட்டுச்சொட்டாக 
கண்ணீர் பெருகி வழிவதை யாருக்கும் காட்டாத அழை, 
 
உண்மையில், இந்த வாழ்க்கை ஒரு வதை
பிரிவு பிரிவென எல்லோரையும் 
நேசித்து நேசித்து பிரியும் வதை,
 
உயிர் போவது கூட விடுதலைதான் போல், ஆனால்
யாரோ இறப்பதை சகிப்பது 
இறக்கும்வரை வலிக்கும் வதை,
 
மனம் சகிப்பதேயில்லை பிரிவை
மனதிற்கு அன்பு காட்ட மட்டுமே தெரிகிறது 
அன்பில்லாத இடத்தில் மனம் பாவம் 
சிறுபிள்ளையைப்போல அழுது விடுகிறது,
 
முன்பெல்லாம் இப்படி எதையேனும் கிறுக்கினால் கூட 
அதை அம்மா படித்துவிட்டு நல்ல கவிதை என்பாள் 
இன்று அவளில்லாத இடத்தில் நிரம்பி நிரம்பி
எனது எழுத்துக்களும் அழுகிறது;
 
என்ன கிழித்து, எதைச் சம்பாதித்து 
எவ்வளவு சாதித்து என்ன பயன் ?
 
அம்மா இல்லாத வாழ்க்கை அரை வாழ்க்கை
அவளில்லாத பொழுதுகள் என்னை
அனாதையாக்கி விடுகிறது,
 
எதற்கோ பெற்று எதற்கோ விட்டு 
ஏன் போனாளவள்? அவளிடம் நானினி பேசவேமாட்டேன் 
 
ஆனால் பாவம் அம்மா
இந்தக் காற்றிலோ மழையிலோ வெளிச்சத்திலோ 
ஏன், இந்த மொழியில் கூட இருப்பாள் 
என்னைத் தொட முடியாமல் தவிப்பாள் 
பாவம் அம்மா, அவளுக்கு பிள்ளைகளைத் தவிர 
ஒன்றுமே தெரியாது;
 
என் பிள்ளை என் பிள்ளை என்றுச் சொல்லிச் சொல்லி 
வெறும் சொற்களை விதைத்துவிட்டு சென்றுவிட்டாள் 
 
இன்று அம்மா இருந்த இடத்திலெல்லாம்
அவளுடைய  நினைவுகளும் அவள் காட்டிய அன்பும் 
அவளுடைய கம்பீர சிரிப்பும் நிறைந்திருகிறது;
 
ஆனால், அவள் மட்டும் இல்லை;
இந்த உலகிலேயே ஒரு கொடிய நிலை இது தான் 
அம்மா இல்லை யென்று உணர்ந்தும், உயிரோடிருப்பது!!
—————————————————————

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, உயிர்க் காற்று | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா…

வ்வொரு விதைக்குள்ளும்
ஒரு காடிருக்கும் என்பார்கள்
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும்
ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே
மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள்,
 
கவலை விடு, நம்பிக்கைக் கொள்
பிணங்களுக்கு பூச்செண்டு யென்னும்
அவச்சொல் அழி,
மடிவது அத்தனையுங் குடும்பங்களென்று உணர்;
உயிர்ச்சொல் கொண்டு
நெஞ்சுக்குள் அடைமழையென சூழும்
கண்ணீரை அகற்று, மரணத்தை சபி;
 
விழும் ஒரு சொட்டுக்கண்ணீர்
கடைசிவிசும்பலின் சாட்சியென்று
சபதமெடு;
கைகோர்த்து நிற்கவோ தோள்புடைத்து எழவோ
எவரையும் தேடாதே;
உன்னால் மட்டுமே உன்னை உயிர்ப்பிக்கயியலும்;
நீ முயன்றெழுதலே
நீ பிறருக்கு செலுத்தும் முதல் நன்றி;
 
நீயும் நானும் வேறல்ல
நமக்குள் உயிர் ஒன்றுதான்
அதைப் பறிக்கும் பயத்தை முதலில் அடித்துவிரட்டு
உயிர்க்குமொரு திமிரை உடம்புள் செறிந்து நிரப்பு
உன்னால் ஆனது உலகு, உன்னால்
எல்லாமாகும் நம்பு;
 
இப்பிரபஞ்சமெங்கும்
நிறைந்துக்கொள்
மரணத்திற்கு அடங்காத வாழ்வின்
கடைசிமூச்சை எடுத்துக்கொண்டு
ஒவ்வொரு அருகாமை மனிதரையும் தேடி ஓடு;
நீ பிணமல்ல என்று காட்டு;
 
இழுப்பதும் விடுவதும்
உன்னால் முடியும்போதே
திமிறி எழு;
ஒரு தீப்பிழம்பென மீண்டெழுந்து வா;
இந்த வாழ்க்கை
எல்லோருக்கும் பாடமாகட்டும்
வெற்று மரணமாக வேண்டாம் கேள்;
 
மாயும் மனிதர்களை
மருந்தும் காக்கவில்லை
மரணமும் தீண்டவில்லை; பயத்தில் மடிகிறார்கள்
பயம் ஓருயிரைக் கொல்லுமெனில்
நம்பிக்கை ஏன் ஒரு உயிரைத் தேற்றாதா?
நம்பிக்கை ஒரு உயிரைக் காக்காதா?
 
அவன்
அவள்
எல்லாம் சேர்ந்து தான் நாம்
அது பாசத்தால் நெய்த வலை; ஆனால்
உயிர்க்குத் தெரிந்தது ஒன்று தான்; அது நீ;
அந்த நீ நினைத்தாலன்றி
இனி நமக்கு விடியலில்லை;
 
உன்னால் முடியும்
சாகமுடிபவர்களுக்கு வாழ முடியாதா யென்ன?
முடியும்.
ஒரு துளி காற்று;
ஒரு துளி நம்பிக்கை;
ஒரு துளி வேகம் மனதிற்குள் நிரப்பிக் கொண்டெழு;
 
துளித் துளியாய்
நம்மை நாம் சேர்த்துச் சேர்த்து
தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா;
வீழ்வது மரணம்’ அது எல்லோராலும் இயலும்
வாழ்வதே நீ; அது உன்னால் மட்டுமே முடியும்; வாழ்ந்துகாட்டு!!
———————————————
வித்யாசாகர்

Posted in உயிர்க் காற்று | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக