நண்பர்களுக்கு வணக்கம்,
பொதுவில் பேசுவது கொதிநீரில் நடப்பது போன்று; காரணம் அவதூறு வந்துவிடுமோ என்றல்ல. தவறான கருத்தைச் சொல்லி யாரையும் வழிதவற வைத்துவிடக் கூடாது என்பதாலும், எவரொருவரின் மனதும் வலித்துவிடக் கூடாதென்பதுவுமே பேரெண்ணம். பெருங்காரணம்.
இந்த காணொளியும் மகிழ்ச்சியைக் குறித்தும், வாழ்வின் சவால்களை வெல்வது பற்றியும் பேச எண்ணியதே. என்றாலும், நீங்கள் கேட்டு சரியெனில் மகிழ்க. அல்லது போனால் குறை பொறுத்தருள்க.
நானும் கற்கிறேன், நானும் பயணிக்கிறேன், நானும் இம்மண்ணில் வாழ்கிறேன், எல்லாம் நாளடிப்படையில் எனக்கும் மாறலாம். நல்லது எதுவென்றாலும் தலைமேல் ஏற்று எல்லோரின் வாழ்வும் நல்லதாக அமையவே முயன்று வருகிறேன். எனவே, நல்லவை விதைத்துப் போவோம். நல்லதே எல்லாம் நடக்கும், நல்லதாகவே எல்லாம் மாறும் என்பது எனது அழுத்தமான நன்மைபிக்கை.
பொறுமை காத்து காணொளி முழுதும் பாருங்கள். திட்டாதீர்கள். தவறை எடுத்தியம்பினால் ஏற்று, எடுத்து, என்னையும் சரிசெய்துகொள்ள காத்திருக்கிறேன் அன்புறவுகளே.
ஏறத்தாழ ஒரு மணி நேர நிகழ்வு. காணொளியைக் காண இங்கே சொடுக்கவும் –
ஏற்றத்தாழ்வின்றி, பாகுபாடின்றி, அனைவருக்குமான மிக்க அன்பும், நன்றியும், வணக்கமும், வாழ்த்துக்களுடனும்;
உங்களன்பு
வித்யாசாகர்