Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ –84

சாமிக்கும் சாமிக்கும் திருக்கல்யாணம் ஒரு கல்யாணமும் நடக்காத முதிர்கன்னி விரதமிருந்தால்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –83

கோவிலை சுற்றி தேடி – கிடைக்காத கடவுள்; ஏழைகள் சொல்லும் நிறைய நன்றிகளில் தென்படாமலில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –82

கடவுள் இருக்கும் இருப்பை காசுபணம் காட்டுகிறது; காசு பணத்தையும் – கடவுள் காட்டுமென நம்புகிறது மனசு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –81

கொடுக்க மனமில்லாத பணத்தால் – மனிதன் கருமியாகிறான் கொடுத்தவரெல்லாம் வள்ளலானதில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –80

பெட்டியில் பூட்டி பூட்டி வைத்ததில் காகிதமும் பணமும் ஒரே ஜாதியெனப் புரிந்தது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக