Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஹைக்கூ – 12

மனசு தோற்கும் இடத்திலிருந்து ஒரு வெற்றி கூட புறப்பட்டதில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | 1 பின்னூட்டம்

ஹைக்கூ – 11

உனக்கும் எனக்கும் ஒரு பொருத்தமும் இல்லை என்றாலும் இருப்பதாகவே நம்புகிறது மனசு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 10

வாழ்வின் பாதைகளில் ஒற்றை தெருவே மறப்பதில்லை – நீ சென்று திரும்பிப் பார்த்த தெரு!!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 9

கல்லும் கல்லும் உரசினால் – நெருப்பு வருமென்றறிந்த மனிதனுக்கு கத்தியும் கத்தியும் உரசினால் மரணமென்பது புரிந்தும் – நீள்கிறது போர்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 8

உலகமிதோ அலைபேசி தூரத்தில் மனிதமெங்கோ மனிதனை தொலைத்த இடத்தில்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக