எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்குத் திருமணம்..

மணமகள்: சங்கவி                                                    மணமகன்: விருதைப் பாரி

மணநாள் : 08.07.2012

வாழ்த்திலடங்கிய வார்த்தைகள்..

ன் தாய் சுமந்திடாத கர்ப்பம்
உடன்பிறவா உயிர் கரு
அன்பின் பெருநெருப்பு
அண்ணா அண்ணா என இதயம் சுற்றி
பாசத்தைப் பூஜிக்கும் நெறியாளன்
கோடு கிழித்தால் தாண்ட மறுக்கும் அன்புத் தம்பி
கோட்டை’யென்றாலுமதை தமிழ்கொண்டு தகர்க்கும் பேராயுதம்
தமிழ் தமிழென ஓடி இனம் இனமென பற்றுய்து; குவைத்தின்
தெருவெல்லாம் மண்ணின் மரபு பரப்ப உழைக்கும் அரிய பேச்சாளன்
புத்தகத்தின்வாசனை பூமியெங்கும் கமழ்ந்துவர
படிப்பினைக்கு தமிழ் பூசி –
பாமரனுக்கு அறிவுகூட்ட தெளிவுதேடி தவிக்கும் பற்றாளன்;

இன்று சங்கவியின் கைபிடித்து
வாழ்வின் சங்கெடுத்து குலமரபில் முழங்கி
கொட்டும் கெட்டிமேள சப்தங்களுக்கிடையே
சப்தமின்றியவள் பாதச் சுவடுமிதித்து – தாம்பத்திய வாசல் நுழைகிறான்..

அவள் கொஞ்சுந் தமிழ் பேச்சழகில் நனைந்தினி
பேச நாலும் நாளும் கற்று
வாழ்வின் பாடத்தை வார்த்தைப் பிசகாமல் போதிக்க

அவ்வை பாடிய பெருமைமிகு தமிழில்
அய்யன் தீட்டிய குறளின் தனிச் சிறப்பில்
அம்பிகையவளின் துதி பாடிப் பெறும் கீர்த்தியின் வழிநின்று
உலக நட்புறவுகளின் மன இனிமையோடு
வாழ்வாங்கு வாழ வாழ்த்துவமே!! வாழ்த்துவமே!!

ன்பிற்கினிய சகோதரி திருமதி சங்கவி பாரிக்கும்
அவளினிய மணவாளன் திரு. எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்கும் எம் மனம் நிறைந்த திருமணநாள் நல்வாழ்த்துக்களும் நிறைய அன்பும் இறையாசியும்… உரித்தாக –

பேரன்புடன்…

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்த்துக்கள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக