நீ காற்று; நான் உயிர்☘️

ஒரு துளி
நம்பிக்கை போதும் ;
வாழ்க்கை கடல் போல விரிவதற்கு,

ஒரு நல்ல
செயல் போதும் ;
நம்பிக்கை வெற்றியாய் அமைவதற்கு,

துளி துளியாய் வாழ்வில்
சில லட்சியங்கள் போதும் ;
எண்ணங்கள் பெரிதாய் மாறுவதற்கு,

சின்ன சின்ன தியாகங்கள்
சின்ன சின்ன சேவைகள் போதும்
பிறப்பை முழுதாய் வெல்வதற்கு,

இந்த உலகில் எல்லாமே
துளி துளி தான்
நீயும் நானும் நம் உயிரும் கூட
ஒரு துளி தான்,

துளிக் காற்று தான் நீ
ஒரு சொட்டு உயிர் தான் நான்!!

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in உயிர்க் காற்று and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக