Tag Archives: நீயே முதலெழுத்து..

சந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..?”

தேரோடாத தேரடி வீதி ஏருழாத எம் பாட்டன் காரோட்டும் பட்டினத்தில் கசக்காத என் தமிழுக்கு வணக்கம்.. —————————————————- ஏகலைவனாவாகவே இங்கு நான் என் பாடத்தைக் கற்றாலும் சுண்டுவிரலைக்கூட கேட்டிடாத என் ஆசான்கள் அணிவகுக்கும் ராஜபாட்டையில் எனக்குமொரு இடத்தைத் தந்த – சந்தவசந்ததிற்கு என் பணிவான வணக்கம்.. —————————————————- நக்கீரனைப்போல நெற்றிக்கண்ணிற்கும் வளையாது சொக்குபொடிக்கும் வழுவாது சொல்லும்பாட்டில் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

40, அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு..

எனக்கொரு வீடு இருந்தது.. அங்கே எனக்கொரு போர்வை எனக்கென ஒரு தலையணை எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது.. என் தலையணையிடம் நான் நிறைய பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன் தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்.. வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும் நான்கு கைகொண்டு வீடு எனை அணைத்துக் கொள்ளும்.. எட்டி வெளியே பார்த்தால் வாசலில் மல்லிகைத் தெரியும் மல்லிகை … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

39, மனைவியென்பவள் யாதுமானவள்..

நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது வார்த்தைகள்.. உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும் கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை; கவிதையின் லயம் பிடித்து வரிகளாய்க் கோர்க்கிறேன் உள்ளே நீயிருக்கிறாய், என் பசியறிந்தவளாய் என் உறக்கத்தின் அளவறிந்தவளாய் என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்.. காற்று வீட்டுச் சுவர் உன் துணிகள் எங்கும் தொடுகையில் உன் முகம் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கல்லும் கடவுளும்..

மூடிய கண்களின் ஆழத்தில் பளிச்செனத் தெரிகிறதந்த வெளிச்சம்; வெளிச்சத்தை உதறிப் போட்டு எழுந்தேன் கடவுள் கீழே கிடந்தார்!! பாவம் கடவுளென தூக்க நினைத்தேன் – விழுந்தவர்கள் பலர் நினைவில் வர விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன் உன் கோபம் நியாயம் தான் உன்னை இப்படி படைத்தது என் குற்றம் தானே என்றார் கடவுள் உளறாதே நிறுத்து உன்னை … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

36, கைம்பெண் அவளின் காலம்..

சாப்பாடென்ன சாப்பாடு அது வெறும் நெஞ்சுக் குழிவரை விழுங்கி விழுங்கா உன் நினைவு அதலாம் கடந்து கடந்து நிற்கிறது மகளே.. ஏழையின் குடிசையில் அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில் நீயும் பிறந்தாயே.. விதவை என்றாலே வெற்று நெற்றியில் காமம் தடவி வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க கண்ட … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்