Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

132 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

தெருக்களில் – எத்தனையோ வாகனங்கள் தரையை கிழிக்கும் விதமாய் சீறிப் பறக்கிறது, யாருக்கு என்ன அவசரமோ?? எந்த வண்டி விமானத்தின் கடைசி நிமிட துளிகளின் அவசரத்திற்காய் போகிறதோ, எந்த வண்டியில் ஒரு சகோதரி பிரசவ வலியால் துடிக்கிறாரோ?? எந்த வண்டி இண்டர்வியூ முடியும் கடைசி தருவாய் நோக்கி விரைகிறதோ, எந்த வண்டியில் மரணம் நெருங்கும் யாரோவை … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

36 முள்ளிவாய்க்காலுக்கு அப்பால்!!

ஈழ விடிவு நோக்கி இடையுறாத காத்திருப்பிற்க்கிடையே விதி ஏற்று – குடும்பம் சுமந்த சுயநல பிறப்பாய் வந்தேறிய தமிழக தெருக்களில் தள்ளாடுகிறது என் கால்கள்; ஒரு – மழை படராத சுவற்றில் வர்ணப் பூச்சுகள் உதிர்ந்த சுவடுகளுக்கிடையே ஏனோ லயிக்கிறது மனசு; என் உடைபடாத வார்த்தைகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் கண்ணீர் குவியலில் யார் யாரை நான் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று (29)

என் வீட்டு எண்ணிக்கையில் எங்களை எல்லாம் மீறி – நன்றியோடு சேர்ந்திட்ட மற்றொரு உறவு; அக்கா அண்ணன் கோபித்த போதும் அம்மா திட்டிய போதும் அப்பா அடித்த தருணங்களின் போதும் வாலாட்டி, முகம் தடவி குழைந்து குழைந்து அன்பூட்டிய செல்ல விலங்கு; பகலெல்லாம் தூங்கியோ தூங்காமலோ எதையேனும் உண்டோ இல்லாமலோ கால் சுற்றி வந்த மிச்சத்தை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

வீட்டின் வாழும் அடையாளம் தலையணை (28)

இரவு நெருப்பின் இன்னொரு காதலன்; காதலி; மனசு பெறாத தூக்கத்தை மெத்தெனக் கொடுக்கும் தலையணை! வருடத்து வாசனைகளை மிச்சம் வைத்திருக்கும்; வந்தவர் போனவரையெல்லாம் நினைவில் முடிந்திருக்கும்; புதிய உறை மாற்றினாலும் – பழசு மறக்காத தலையணை! ஐம்பதிலிருந்து ஆயிரம் வரை விற்கிறது; ஆயிரங்களை கடந்து பழைய கந்தைதுணியில் கனக்கிறது; கனவும் தூக்கமும் வரவு என்பதால் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பியூட்டரா? கொக்கா; (27)

நினைத்ததை செய்தும் நேரத்தை விழுங்கும் போதை; விஞ்ஞானம் பேசி அஞ்ஞானத்திலும் ஆழ்த்தும் கண்டுபிடிப்பு; கணினி! வளர்க்கவும் கெடுக்கவும் தெரிந்த ஆசிரியன்; மின் சக்தியில் உயிர் பெரும் ஜடப்பொருள்;கணினி! உலகம் பற்றி – ஒரு சொடுக்கலில் காட்டும் வித்தகன்; மனிதன் விதைத்ததில் – விலையும் அறிவு ஜாலம்;கணினி! சான்றிதழ் இன்றி சர்வமும் கற்பிக்கும் கல்வியாலயம்; சரித்திரம் பேசி, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக