Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

வாழும்போதே யோசிக்கலாம் வாங்க..

ஒரு தலைகீழ் நடனம் போலத் தான் வாழ்க்கை, எங்கோ எதையோ சுற்றித் எல்லாம் தெரிந்து கொள்வதற்குள் வீடெல்லாம் மரண வாடை! மரணம் விட்டொழியா வாழ்வென்றில்லை – மீண்டும் பிறக்கும் பிறப்போ உறுதியென்றில்லை – எவர் வந்து சொல்லியோ, கேட்டோ ஜாதி கற்று; மதம் கற்று; இனம் பெற்று – மனிதன் மனிதனாக மட்டுமில்லை! அடுத்தவனை அடித்தால் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 5 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 24

பத்து மாதமெனும் நீண்டதொரு சுமப்பின் எல்லையில் நீ வந்தாய், உன்வருகைக்குப் பின் ஏதும் – அத்தனை சுமையில்லை உன் அழுகையை தவிர!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 23

நீ – என்பதன் அர்த்தம் உலகம் வானம் பூமி கடல் காற்று தென்றல் அருவி மழை மலர்வனம் மெல்லிசை பாடல் கவிதை புத்தகம் வியப்பு பலம் அதிஷ்டம் நிம்மதி ஏதுமில்லை – குழந்தை என்பதொன்று பெரிது!!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 22

முத்தம் கொடு என்றால் உதட்டை கன்னத்தை பிடித்துக் கடிக்கவோ – எச்சிலொழுக பார்த்து சிரிக்கவோ மட்டுமே தெரியுமுனக்கு; அதை தாண்டி முத்தமென்றால் இப்படியென சொல்லாமலேயே – வரிசையில் நிற்கிறோம் நானும் – உன் அம்மாவும் உன் எச்சிலில் நனைந்த அந்த -முத்தத்தின் அன்பிற்காய்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 21

காலையிலெழுந்ததும் கடவுளை பார்ப்பது நல்லதென்பதில் எத்தனை உண்மை உள்ளதோ; உன்னை பார்ப்பதில் எத்தனை எத்தனை பரவசமுள்ளதடா…

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக