Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

25 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

சிங்களனும் உடன் சங்கறுக்கும் துரோகிகளும் தந்திரத்தால் செய்த நச்சு குண்டுகள் வீசப் பட்டன; அதை உள்ளிழுத்து போரில் – உமிழ்ந்து துப்பியதில் இறந்தது கோழைத்தனம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

ஒன்று படுவோம்; உலகிற்கே போதிப்போம்!

இன்னுமொரு குரங்கின் மனோபாவத்திலேயே பரிமாண வளர்ச்சி பற்றி பேசியும் எழுதியும் கொள்கிறான் மனிதன். இரண்டில் எது சரி என்று யோசித்த இடைவெளியில் எத்தனை மனிதர்களை இழந்து விட்ட இனம் நம்மினம். இன்று ஏதோ ஒன்று முடிந்துவிட்டதாய் என்னவோ தன்னால் நடந்துவிட்டதாய் – பிணங்களின் மண் மூடிய தரையில் அமர்ந்து, அடிமை சிறையில் அகப்பட்ட எத்தனையோ தமிழர்களின் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 4 பின்னூட்டங்கள்

போராடுவோம்; போராடுவோம்!

மாவீரர் நாள்! இறந்தவர்களின் சமாதிகளை நனைக்கிறது கண்ணீர், சமாதிக்குள்ளிருந்து எழுந்து கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு துப்பாக்கி தூக்கி சல்லடை சல்லடையாக்கி சிங்களரை விரட்ட ஈழம் மீட்க துடிக்கிறது கைகள். இயற்கையின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி போனதால் இனி புதியதாய் பிறக்க திட்டமிடுகிறார்கள் போல், சமாதிகள் அமைதியாகவே காட்சியளித்தன. வருந்தாதீர் உறவுகளே, மாவீரர்கள் – அன்றும் உறங்கவில்லை இன்றும் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

நற்செய்தி! நற்செய்தி! சில கவிஞர்களை பற்றி..

சில கவிஞர்களை பற்றி, தமிழக அரசின், இணைய பல்கலைகழக பட்டம் பெறுவதற்கான பாடத்தில் எழுதப் பட்டுள்ளது. அதில் நம்மை பற்றியும் குறிப்பிட்ட பாடத்திட்ட நிர்வாக குழுவிற்கும், பாட ஆசிரியர் முனைவர் கு.மகுடீஸ்வரன் அவர்களுக்கும், உங்களுக்கும், கடவுளிற்கும், முகில் பதிப்பகத்திற்கும் நன்றி! எத்தனை கால உழைப்பு., எத்தனை இரவுகளின் தூக்கம் விழுங்கிய அங்கிகாரம். எனக்கொன்றும் பதவிக்கும் விருதிற்கும் … Continue reading

Posted in அறிவிப்பு | 16 பின்னூட்டங்கள்

சிவதீபனுக்கோர் சபதம் கேள்!

வன்னித் தீவின் தளபதியே நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே ஆணையிரவில் ஆணையிட்டு – புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா??? எல்லி நகைத்தவரிடம் சொல்லி அடித்த வீரமே இருபத்தைந்து ஆண்டில் புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே – கேட்கிறதா??? சிங்களனாயிரம் சங்கருத்து முல்லைத் தீவுபிடித்து புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு பீரங்கி பரிசளித்த சிவதீபமே – கேட்கிறதா??? … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக