Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

பிரிவுக்குப் பின் – 28

இன்று நம் திருமண நாள் – தினமும் இரவின் நடுநிசியிலாவது யாருக்கும் தெரியாமல் அழுதுவிடும் நான் – இன்றாவது அழவேண்டாமென நினைக்கிறேன்; தயவுசெய்து இன்று கனவில் ஊருக்கு வாவென அழைத்து விடாதே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

வெளியூர் வாசிகளின் வலி (22)

இதயம் கீறி எழுதும் ரத்தம் சிந்தா வலிகளை சுமந்து தான் வளைகுடாவில் நகர்கிறது வாழ்க்கை; பிறந்த மண், வீடு, மழை, காற்று, மலர்களின் வாசமும்.. இடி, காகம், குழந்தைகளின் பேச்சு, நாய் குறைப்பு, மாடு கத்தும் ஓசையும்.. பசும்புல் கால் நனைக்கும் பனியின் ஈரம், காலை நேர தேனீர், சுட சுட ருசிக்கும் சிற்றுண்டி, வேளை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 27

முத்தம் கொடுக்கும் ஆசையிலேயே வாழ்க்கை – கணக்க முகம் பார்கவே வருடம் இரண்டு ஆகுதடி; காமம் தலைக்கேறி அமர்ந்து உடல் வருத்தியும் – உள்ளம் உனக்காக உனக்காக – உனக்காகவே நரை தின்று வாழுதடி! குளிர்பெட்டி தின்ற மிச்ச மீதியில் உடல் கட்டை பிழைக்குதடி – இது வாழ்க்கை இல்லை – விதிதானே நிமிஷம் கூட … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 4 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 131

சொட்டு சொட்டான விசமாக – தெருவிற்கு தெரு குடியும் பெண்களின் மோகமும் அரசியல் சாபமும் போலிகளின் கொண்டாட்டமும் இன்ன பிறவும் இன்ன பிறவும் சேர்ந்திறங்கிக் கெடுத்த நம் வாழ்வின் வெளிச்சத்தை மீட்டுத் தர இன்னொரு தாமஸ் ஆல்வா எடிசனை தேடும் நீயும் நானும் – இருந்தென்ன பயனென்று தான் உதிர்கிறது போல்; என் தலைமுடியில் இரண்டு!

Posted in உடைந்த கடவுள் | 8 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 130

படிக்காத புத்தகத்தை படித்ததாகவே எழும் மனப்போக்கு – நீ பார்கையில் பார்த்து கண் மூடிக்கொள்ளும் மனதிற்குள் வெளிச்சமாய் நிறைகிறது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்