Category Archives: ஞானமடா நீயெனக்கு

ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே எண்ண தவிப்பு இருந்து விடும் அன்பை தவிர? அந்த அன்பினை எழுத்தால் சுருக்கி, அதற்கு ஞானமடா நீயெனக்கென புத்தகம் சார் முகமாக பெயரிட்டுள்ளேன்.. படித்துவிட்டு பேசுங்கள். மிச்ச்ள்ளமுதை மீண்டும் மறு பதிப்பாக்குவோம்!!

ஞானமடா நீயெனக்கு – 57

எனக்காக நீ காத்திருப்பாயோ இல்லையோ தெரியவில்லை உனக்காக நான் நிறைய காத்திருக்கிறேன் உன்னோடு மட்டுமே இருக்கிறேன் அதை உன்னைவிட்டு விலகி நின்றெழுதிய இக்கவிதை சொல்லும்! ————————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 56

எப்படியோ.. போகும்போது ஓடிவந்து டாட்டா காட்டவும்; வந்தவுடன் ஓடிவந்து ‘அப்பா’ என்றழைப்பதிலும் என் உயிரை எனக்கே மீட்டுத் தருகிறாயென என்றேனும் நீ வளர்ந்து இக்கவிதையை படிக்கும் தருவாயில் ஒருவேளை புரியலாம்!! ————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (51)

வளர்ந்து நீ பெரியவனாகி என்னென்னவோ செய்ய வேண்டுமென்றெல்லாம் எனக்கு கனவுகளில்லை, நீ நன்றாக வளர்வாய் உனக்கு நான் பலமாக மட்டுமே இருப்பேன், கடைசி வரை நீயெனக்கு; இல்லையில்லை – நான் உனக்கு அப்பாவாக இருப்பதொன்றே போதும்! —————————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (55)

ஸ்டேப்ளர் பின்னென்றாலே சிலருக்கு உடனே புரியும், அப்படியொரு சிறு கம்பி மதிய உணவிலிருந்து பல்லின் இடுக்கில் மாட்டி குத்தியது, உன் அம்மாவின் மேல் அப்படி ஒரு கோபமெனக்கு, சாப்பாட்டில் கம்பி இருந்ததால் அல்ல; அதை நீ; தின்றிருந்தால்?!! ———————————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (54)

உன்னை யார் கண்டாலும் எல்லோருக்கும் தான் பிடிக்கிறது; எல்லோரிடமும் கொடுத்துவிட்டு தனியாக நிற்பதில் நீ இல்லாத என் கைகள் இருக்கவே ஆசையில்லை எனக்கு! ———————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக