Category Archives: பறக்க ஒரு சிறகை கொடு..

ஒரு காதல்; காதலின் நினைவு; முதல் காதலின் வலி; முழு வாழ்க்கைக்குமாய் பயணிக்கும் காதலின் வெற்றியும் தோல்வியுமாய் நாம் என்னும் உணர்வுகளே ‘கவிதை இலக்கணம் கடந்து, இங்கே கவிதைகளென்று தன்னை அடையாள படுத்திக் கொள்ளத் துணிகிறது!

இது ஒரு கவியரங்க கவிதை, தலைப்பு: ‘கவிதையில் காதல்’

சொக்கவைக்கும் தமிழில் சொக்கித் தான் போனது காதலும்; சொக்கித் தான் போனேன் நானும் சொக்கவைத்தவள் அவள்! அவளொரு – மரத்த தமிழச்சி, அந்த மரத் தமிழச்சி பற்றிய கவிதையில் இதோ..யென் காதலிங்கே களம் கொள்கிறது.. தெருவெல்லாம் நெட்டையாய் நின்ற பனைமரக் காலமது, வாய்ஜாலம் விற்று தண்ணீர் பிடிக்கும் ஒற்றைக் குட ‘நீருக்கான பஞ்சமது, அந்தக் குழாயின் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

35 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

எழுத எழுத இசையானாய்.. எழுதாமலே கவியானாய்.. உயிரென்று சொல்லி உறவானாய்.. உறவில் – காதல் நட்பு தாண்டி ஏதேனும் ஒன்று புனிதாமாகுமெனில் – அதுவாக கரைவோம் வா!! ——————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

34 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

என் மொத்த உணர்வின் வெப்பத்தில் – மொழியை பூத்தவளே.. வா.. உன் தனிமையை விரட்டி தாகமொழிப்போம், சுடும் நெருப்பில் ஊற்றிய நீர் போல ஒரு சின்ன சிரிப்பில் கலப்பில் – புன்னகையாய் மலர்வோம் வா.. ————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

33 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

உறக்கத்தை துளைத்தேனடி உண்பதும் மறந்தேனடி பித்தனாய் அலைந்தேனடி – உனை நினைப்பதொன்றையே ரசித்தேனடி; உன் நினைவுகளின் ஈரத்தில் இதயம் நனைந்தேனடி உன் இமையின் அசைவில் தொலைந்தேனடி; உன் உடம்பின் வளைவுகளில் வீழ்ந்தேனடி பின் ஒரேயொரு புன்னகையில் உயிர்த்தேனடி; வார்த்தைகளில் காதலை வடித்தேனடி காதலை சொல்ல கூட கவிதையாக மட்டுமே கறைந்தேனடி! ——————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

32 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

உனக்காக காத்திருந்த தருணங்கள் எனை கொண்று போட்ட கவலையில் கடந்து – விடைகொள்கின்றன; உனை மனதில் சுமக்கும் கனம் கூட சுடும் தீயென தவிக்கையில் – காத்திருப்பு ஒரு சுடும் நெருப்படி பெண்ணே. கீறி அறுத்து இதயத்தில் இருக்கும் உன் முகம் காட்ட துடிக்கின்றேன், வார்த்தைகளால் உடைத்தாவது உன் நினைவுகளை- கவிதைகளால் வடிக்கின்றேன், யாரிடமும் சொல்லாமல்கூட … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக