Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 78

நீயும் நானும் தெருவில் நடக்கையில் – நீ என் கை பிடித்து வருவாய், உள்ளுக்குள்ளே – ஆயிரம் தேவதைகள் கூட நடப்பது போல் உணர்வேன்; இங்கும் நான் தனியே நடக்கையில் நீ ஆயிரம் தேவதைகளோடு வந்து என் கை பிடித்துக் இழுக்கிறாய்; நான் திரும்பிப் பார்ப்பேன் – நீ மட்டும் தெரிவதேயில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 77

உன்னை அடைந்தப் பின்னரே இரவின் வெளிச்சங்கள் கூட – ரகசியமாய் புரிந்தது; உன்னை பிரிந்த பின் தானே – பகலில் கூட வாழ்வின் இருள்கள் துளிர்கின்றன! உண்மையில் பகலை தொட்டு அடையாளம் கண்டுகொள்ளும் என்னால் – இரவை தான் நீயின்றி தொடவே முடிவதில்லை; ஆயினும் – இப்போதெல்லாம் இருபத்தி நான்கு மணிநேர இருட்டில் தான் வாழ்கிறேன் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 76

உன் – கால் கொலுசும்.. கை வளையல்களும்.. சொல்லிடாத – சேதி கேட்டும்; சொன்ன – இரவுகளை நினைத்தும் தான் நகர்கிறது – வாழ்வினிந்த – அர்த்தமற்ற நாட்கள்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 75

என்னோடில்லாத கணங்களில் – மரணம் வந்தென்னை பாதி மென்று விடுகையில், தடுத்துக் காப்பாற்றி விடுகிறது; நீ – எப்பொழுதேனும் அனுப்பும் கடிதம்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 74

உனை விட்டுப் பிரிந்து வருடம் ஒன்றை கடந்த பின்பும் – இன்று என் சட்டையை கழற்றினாலும் அங்கங்கு சற்று – முகர்ந்துக் கொள்வேன்; எங்கேனும் உன் வாசம் மிச்சமிருந்து விடாதா!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக