Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 73

இப்பொழுதெல்லாம் நான் – தனியாகத் தான் – இருக்கிறேன்; ஆம்! நீயில்லாத உலகத்தோடு நான் பேசுவதேயில்லை!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 72

உன் – கால் கொலுசும்.. கை வளையல்களும்.. சொல்லிடாத – சேதி கேட்டும்; சொன்ன – இரவுகளை நினைத்தும் தான் நகர்கிறது – வாழ்வினிந்த – அர்த்தமற்ற நாட்கள்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 71

விழுகின்ற ஒரு சொட்டுக் கண்ணீருக்குத் தான் வருடங்களிரண்டின் வருத்தம் புரியும்; உன்னை காணமல் – பேசாமல் -தொடாமல் – தவிக்கும் வாழ்க்கைக்கு தான் நொடியில் கூட நான் இறப்பது தெரியும்! தொடத் தொட உன் தேகமினிப்பது – கனவிலும் நினைவிலும் மட்டுமென யாருக்குத் தெரியும்; பட படவென உடையும் இதயம் தானிங்கே..’கவிதையென்பது’ உனக்கும் எனக்கும் இடையே … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 70

காற்றினை – கிழித்துக் கொண்டு வந்து என்னை தொடும் உன் கண்ணீருக்குத் தெரிவதில்லை; உன் அழுகையில் அதிகம் வலிப்பது என் இதயம் தானென்று!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 69

இதயம் – வலிக்கிறதென்பதே தெரியாமல் தான் நீ கடந்துக் கொண்டிருக்கிறாய் என்னை; கடை தூரம் சென்று திரும்பிப் பார்க்கையில் -ஒருவேளை நான் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக