Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

வெளியூர் வாசிகளின் வலி (22)

இதயம் கீறி எழுதும் ரத்தம் சிந்தா வலிகளை சுமந்து தான் வளைகுடாவில் நகர்கிறது வாழ்க்கை; பிறந்த மண், வீடு, மழை, காற்று, மலர்களின் வாசமும்.. இடி, காகம், குழந்தைகளின் பேச்சு, நாய் குறைப்பு, மாடு கத்தும் ஓசையும்.. பசும்புல் கால் நனைக்கும் பனியின் ஈரம், காலை நேர தேனீர், சுட சுட ருசிக்கும் சிற்றுண்டி, வேளை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 27

முத்தம் கொடுக்கும் ஆசையிலேயே வாழ்க்கை – கணக்க முகம் பார்கவே வருடம் இரண்டு ஆகுதடி; காமம் தலைக்கேறி அமர்ந்து உடல் வருத்தியும் – உள்ளம் உனக்காக உனக்காக – உனக்காகவே நரை தின்று வாழுதடி! குளிர்பெட்டி தின்ற மிச்ச மீதியில் உடல் கட்டை பிழைக்குதடி – இது வாழ்க்கை இல்லை – விதிதானே நிமிஷம் கூட … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 4 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 131

சொட்டு சொட்டான விசமாக – தெருவிற்கு தெரு குடியும் பெண்களின் மோகமும் அரசியல் சாபமும் போலிகளின் கொண்டாட்டமும் இன்ன பிறவும் இன்ன பிறவும் சேர்ந்திறங்கிக் கெடுத்த நம் வாழ்வின் வெளிச்சத்தை மீட்டுத் தர இன்னொரு தாமஸ் ஆல்வா எடிசனை தேடும் நீயும் நானும் – இருந்தென்ன பயனென்று தான் உதிர்கிறது போல்; என் தலைமுடியில் இரண்டு!

Posted in உடைந்த கடவுள் | 8 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 130

படிக்காத புத்தகத்தை படித்ததாகவே எழும் மனப்போக்கு – நீ பார்கையில் பார்த்து கண் மூடிக்கொள்ளும் மனதிற்குள் வெளிச்சமாய் நிறைகிறது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 129

வானின் – நிறைய வெற்றிடங்களை தாண்டி இடம் கொள்கிறது மேகமாய் உன் நினைவு!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்