Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

1. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

மனதில் நிறைய வைத்துக் கொண்டு தானே – ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறாய்; என்ன வைத்திருக்கிறாயென எனக்குத் தெரியாவிட்டாலென்ன உனக்குத் தெரிந்தால் போதும்!

Posted in காதல் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

காற்றில் கலந்த ஈழப் புரட்சி – பொன்னம்மான்!

நீ சிரித்துப் பாடிய பாட்டெங்கே உன் சிரித்த முகமெங்கே நீ வளர்த்த வீரமிங்கே – கண்ணீர் விட்டழுகிறதே; உன் கருணை முகமெங்கே காற்றில் தீராத உன் பாடல் – தொலைந்துப் போனதெங்கே விடியாத ஈழ இருட்டில் மேலும் – நீ பிரிந்த சேதி வலிக்கிறதே; பெற்ற – தாய் காட்டுமுன் பாசமெங்கே கொதித்தெழுமுன் கோப துடிப்பெங்கே … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 26

இருபத்தி நான்கு மணி நேரத்தில் எங்கு திரும்பினாலும் – என் இதய முட்களில் இன்பமாய் நீயடி..! காற்றின் சிறகு பிடித்து உயிர் வரை சென்று பார்க்கையில் – இதய தெருக்களெல்லாம் வெளிச்சமாய் நீயடி..! இரவில் உறையும் உணர்ச்சிகளில் உயிர் கொள்ளும் வழியிலும் – எனது கண்ணிய நெருப்பாய் காப்பவள் நீயடி..! இரத்தம் கொதிக்கும் வெப்ப மூச்சின் … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | 8 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 25

நீ நான் என்பதில் – அதிக வேற்றுமையில்லை; பெண் ஆண் என்பதைத் தவிர!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 24

பெரிய பெரிய அதிசயங்கள் – இப்படித் தான் நிகழ்கின்றன; நீயும் நானும் நேருக்கு நேர் சந்தித்தோம் கனவில்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்