Category Archives: கவிதைகள்

ஹைக்கூ – 117

என்ன தான் அழுதாலும் – தண்ணீர் சூடாகவே ஊற்றப் படுகிறது – குழந்தைகளின் மேல்!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 116

அவளின் அமங்கலம் பூசிய வெற்று நெற்றியின் கோடி ஆசைகளை விதவை என்னும் ஒற்றை வார்த்தை மறைத்துக் கொள்கிறது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

அவள் இறப்பாளென்று தெரியாமல் ஓட்டிய – மிதிவண்டி! (18)

அரைபெடல் அடித்தே உலகம் சுற்றிய காலமது! விழுந்து முட்டி உடைந்த பல தடவைக்குப் பிறகும் – மிதிவண்டி ஆசை விட்டதேயில்லை! அப்பாவின் – பழைய ராலி சைக்கிள் தாண்டி BSA SLR கனவு மிதிவண்டியாகவே கடந்துவிட்டது வாழ்க்கை! நானும் அண்ணனும் ஊர் ஊராய் சுற்றியதும்; என் ஒரே தங்கை இறந்துப் போவாளென்று தெரியாமல் அவளை மிதிவண்டியில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

நில்; கவனி; யாரிந்த முத்துக் குமார்?

குருதி வெறி கும்பல்களுக்கு உடல் சுட்டு இன அடையாளம் காண்பித்தவன்! இரத்தம் சுடும் உறவிருந்தும் ஒதுங்கி நின்ற தமிழகத்தில் – யுத்தம் புகும் உணர்வூட்டியவன்! தொப்புள் கொடி உறவறுத்து ஈழத் தமிழ் இனத்திற்காய் – தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்! யார் குற்றமும் பகிராமல் என் போன்ற இளைஞன் குற்றமென நெற்றி பொட்டில் நெருப்பெய்தி … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 115

வானம் தொடாத சிறகொன்று – காற்றில் அலைந்து அலைந்து திரிந்ததில் வெளியில் தெரியாத – நிறைய முகங்கள் வந்து வந்து களைகின்றன!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக