Category Archives: கவிதைகள்

காற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்!

ஊரெல்லாம் மனிதர்களுண்டு உனக்கோ எனக்கோ ஒன்றென்றால் மனிதரில் அத்தனை மனிதமில்லையே; நிலம் செடி கொடி மரம் எல்லாம் பல்கி பெருகியதுண்டு எல்லோரின் தேவைக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே; காற்று நீர் வானம் பரந்து விரிந்து கிடக்க ‘தன்’ சுவாசமும் பார்வையும் பருகலுமாய் தானே நம் வாழ்க்கை??? தீயதை எட்டிப் பிடித்துக் கொள்ளும் இதயம் – நல்லதை விலகி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்

நட்பின் பரிணாமம் உறவெனக் கொள்க

சிறகில்லாத பறவையாய் நாட்கள் உறவுகளின் தூர கால – இடைவெளியில் சிக்கித் தான் போகின்றன; கொட்டும் பனிச் சாரலாய் சிந்தும் வியர்வை ரத்தத்தின் – வாசம் நுகராத வீதிகளில் உறவென்னும் ஒற்றை சொல் சிறகு முளைத்துப் பறந்த வேகம் மரணத்தில் முட்டும் போதே – உயிர் வரை வலிக்கிறது; உறவு! வருவதும் போவதும் தான் அர்த்தமெனில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

மரணத்தை கேட்டுப் பார்..

ஓ.. மனிதா! ஒரு கால தூர இடைவெளியில் நிகழ்கிறது – உனக்கும் எனக்குமான போர்; நேற்றைய அண்ணன் இன்றைய பங்காளிகளல்ல நாம்; மனிதன் பிறப்பிலிருந்தே சுயம் அறுக்காதவன் – நேற்றிலிருந்தே அவன் அப்படித் தான் எப்படி இன்றோ; இடையே பிறந்து ஏதோ ஒரு புள்ளியில் அற்று போகிறது பாசமும் நட்பும் காதலும்; கேட்டால் விருப்பு வெறுப்பென்றோ … Continue reading

Posted in சிலல்றை சப்தங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 4”

கழுகு கழுகாரே.. கழுகாரே.. முக்கால் மைல் தூரம் மேலே பறந்தாலும் கீழேயுள்ள உயிர்கள் கூட உனக்கு நன்றாகத் தெரியுமாமே; நீ – மகாவிஷ்னுவிற்கே வாகனமாமே; கொஞ்சம் மேலே பறந்து வட்டமடித்து வா – எங்கள் தமிழீழ மண்ணில் புதைக்கக் கூட இல்லாமல் காடுகளில் ஆங்காங்கே – அழுகிக் கிடக்கும் ஒவ்வொரு உடலுக்குள்ளும் ஒவ்வொரு வரலாறிருக்கும் சொல்வாயா … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்”

எல்லோருக்கும் பறவை கவிதை பிடிக்குமென்று நினைக்கிறேன். அது ஒரு வலியின் சுவடு.. தவிர இக் கவிதைகளுக்கு காரணம் சொல்லவேண்டாம் அது ஒரு வலி வேதனை ரணம், உடல்கட்டை எரிந்தாலும் ஆறாத காயம். நேரில் காணாவிட்டாலும் காதுக்கருகில் வெடிக்காத சிங்கள குண்டுகளின் சப்தம் என் மனதை தொலைத்த வலிகளும், நாளிதழ்களிலும், மின்னஞ்சல்களில், செய்திகளிலும் ரத்தம் ரத்தமாக கண்ட … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக