24 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

தோ அந்த
மரத்தடியில்
கொஞ்சம் அமர்ந்து
போவோம் வா..

மரக் காற்றின்
நினைவுகளில்
நம்மை காதலர்களாய்
நினைவு கொண்டிருக்கும் மரம்!!
——————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

23 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

த்தனையோ இலைகள்
உதிர்ந்துக் கொண்டே
இருந்தும்;

ஏதோ ஒரு இலையில்
மையம் கொண்டு மனசு
விழாதென்று நம்புவதாகவே –

தோற்கும் நிறைய பேரை பார்த்தும்
நாம் மட்டும்
தோற்கமாட்டோம் என்றே
நம்புகிறது நம் காதல்.

நம் காதலின் வெற்றி
சேர்தலில் மட்டுமல்ல
நாம் பிரியாதலிலுமென்று எண்ணிக் கொள்வோம்!!
———————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

22 எப்படியோ நிகழ்கிறது காதல்..

கோவில் திருவிழாவில்
எல்லோரும்
சாமி வருமென
காத்திருக்கிறார்கள்;

நானும் சாமியோடு
நீ வருவாயென
காத்திருக்கிறேன்!
—————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

21 எப்படியோ நிகழ்கிறது காதல்..

நீயும் நானும்
தெருவில் நடந்து செல்கிறோம்.

நீ விலகி விலகி
நெருங்கி வருகிறாய்..

நான் உனை நெருங்கி நெருங்கி
விலகிப் போகிறேன்..

எப்படியோ மாறி மாறி
நெருக்கம் கொண்டு விடும் நம்
ஸ்பரிசத்தில் –
தெருவோரப் பூக்களாய்
மலர்கிறது நம் காதலும்!
—————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

20 எப்படியோ நிகழ்கிறது காதல்..

காலங்களை கடந்தும்
நிறைய மனசுகள்
மாறாமலிருப்பதில்லை.

மாறிப் போகும் போது
மாறட்டும் என் மனசும்.

அதுவரை உனையே
நினைத்திருக்க –
உன் பார்வையை மட்டும் எனக்கு
கடன் கொடு.

உயிர்பிரியும் விளிம்பில்
உனை மறக்கும் மனசு ஒருவேளை
கிடைக்கலாம்,

அந்த கிடைப்பில்
உன் பார்வைகளாவது
மிட்ச்சப் படட்டுமடிப் பெண்ணே!!
———————————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக