19 எப்படியோ நிகழ்கிறது காதல்..

ப்போதெல்லாம்
நான் அதிகம் உன் நினைவோடு
இருக்கிறேன்;

உன்னை பற்றியே
எண்ணுகிறேன்;

உனை பார்ப்பதில்
உன் அருகாமை கொள்வதில்
முனைப்பாகிறேன்;

காலத்திற்கும் நீ
கிடைப்பாயா என்றே
ஏங்குகிறேன்;

கிடைக்காவிட்டால்
என் நிலை என்ன என்றே உணராமல்
எப்படி நிகழ்கிறதோ;
இத்தனையும் உன்மேல்???!!
———————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

18 எப்படியோ நிகழ்கிறது காதல்..

உனக்கு ஒரு
கடிதமெழுதினேன்..

கடிதத்தின்
வார்த்தைகளில் எங்குமே
காதலில்லை
காதலிப்பதாய் சொல்லவில்லை

காதல், அக்கறை மிக்கதெனில்;
என் அக்கறையையும்
காதலென உணர்க!!
———————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

17 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

ன் தலையில்
சூடிய
மல்லிகையிலிருந்து
ஒன்றிரண்டு கீழே விழுகிறது.

நான் ஓடிவந்து
எடுத்துவிட வில்லை.

மண் இன்று
அதிஷ்டம் செய்திருப்பதாய்
நினைத்துக் கொண்டேன்!
————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

16 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

டும் பேருந்தில்
முன்னே நீ நிற்கிறாய்

பின்னே நான் உனையே
பார்த்துக் கொண்டு நிற்கிறேன்

யாரோ என்னை
பொருக்கி என்று சொல்வதும்
உனக்குக் கேட்டிருக்கலாம்

இருந்தும் நீ
திரும்பிப் பார்க்காமலே
தலைகுனிந்துக் கொண்டதில்
தோற்றுத் தான் போனது நம் காதல்!
—————————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

15 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

விடைபெற இயலா
தருணங்களில்;
நினைவுகளை நம்மோடு
அழைத்துக் கொள்வோம்;

நினைவுகளிலாவது நாம்
காதலராய் –
செர்ந்தேயிருப்போம்!
———————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக